இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு நேர்ந்த சோகம்...மயானத்தின் மேற்கூரை இடிந்து 18 பேர் உயிரிழப்பு!
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் மயானத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 18 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் பலர் படுகாயம் அடைந்தனர். இதுவரை மொத்தம் 38 பேர் மீட்கப்பட்டனர். மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள முராத்நகர் பகுதியில் மயானம் ஒன்றில் நடந்த இறுதிச்சடங்கில் 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அந்த பகுதியில் பலத்த மழை கொட்டியது.இதனால் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர்கள் அங்கு இருந்த மயான கட்டடத்தில் ஒதுங்கினர்.
அப்போது எதிர்பாராதவிதமாக மயானத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அங்கிருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளுக்குள் இருந்து 18 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
அவர்களுக்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 38 பேர் மீட்கப்பட்டனர். மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தகுந்த உதவிகளை செய்யும்படி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மத்திய பாதுகாப்பு அமைச்சரும், லக்னோவைச் சேர்ந்த எம்.பி.யுமான ராஜ்நாத் சிங் இந்த சம்பவம் குறித்து வேதனை தெரிவித்ததோடு, பலியானவர்களின் குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்தார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications