பாபர் மசூதி இடிப்பு தினம்.. மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு..மேலப்பாளையத்தில் கடைகள் அடைப்பு
லக்னோ: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நெல்லை மேலப்பாளையத்தில் கடைகள் அடைக்கப்பட்டன.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கரசேவர்களால் கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி இடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இன்றைய தினம் பாபர் மசூதி தினம் அனுசரிக்கப்பட உள்ளது. எனவே டிசம்பர் 6 ஆம் தேதி நாடு முழுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கோவையில் மட்டும் சுமார் 2000 போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், அதிக கூட்டம் கூடும் பஸ் நிலையங்கள், ரயில்வே நிலையங்கள் வழிபாட்டுத் தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயணிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிவோரை விசாரித்து அனுப்பினர். மேலும், வெடிகுண்டு நிபுணர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். பயணிகளின் பைகளும் உரிய பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டது. இது தவிரக் கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்கள், தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் என முக்கிய வழிபாட்டுத் தலங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கே வரும் பக்தர்களும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டனர். கோவை விமான நிலையத்திலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை மட்டுமின்றி தமிழகம் முழுக்க பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லையில் கடந்த 3 தினங்களாகவே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது. ஊர்க்காவல் படையினரும் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நெல்லை புது பஸ்டாண்ட், ஜங்சன் ரயில் நிலையம், நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது. நெல்லை மேலப்பாளையத்தில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன. இதனால், மேலப்பாளையத்தில் உள்ள கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. எஸ்.டி.பிஐ, தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆகியவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications