லதா மங்கேஷ்கர் மறைவால் உ.பி. பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு ஒத்திவைப்பு!
லக்னோ: இசைக்குயில் லதா மங்கேஷ்கர் மறைவால் உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு இன்று நடைபெற இருந்த பாஜக தேர்தல் அறிக்கை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உ.பி.யில் பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிரான டெல்லி போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் ஜாட் சமூகத்தினரும் முஸ்லிம்களும் அதிகம்.
மேற்கு உ.பி.யில் பெரும்பான்மையினராக ஜாட், முஸ்லிம்கள் உள்ளனர். 2013-ம் ஆண்டு முசாபர்நகர் மதமோதலின் போது பிரிந்து கிடந்த இரு சமூகங்கள் விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் மூலம் ஒருங்கிணைந்தனர். இப்பகுதியில் பாஜக அதிக இடங்களைப் பெறுவதற்கு போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

ஜாட் வாக்குகள்
அதேநேரத்தில் ஜாட், முஸ்லிம்கள் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்வதில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி நம்பிக்கையோடு உள்ளது. ஜெயந்த் சவுத்ரி தலைமையிலான ராஷ்டிரிய லோக் தள் கட்சியுடனான கூட்டணி, ஓபிசி தலைவர்கள் பாஜகவை விட்டு வெளியேறி சமாஜ்வாதி கட்சியில் இணைந்தது உள்ளிட்டவைகள்தான் அகிலேஷ் யாதவ் அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளன.

அமித்ஷா பிரசாரம்
இதனை சமாளிக்கும் வகையில் ஜாட் சமூகத் தலைவர்களை அமித்ஷா ஏற்கனவே சந்தித்து பேசியிருந்தார். அப்போது, முகலாயர்களை எதிர்த்து போராடியவர்கள் ஜாட் சமூகத்தினர்... தங்களுக்கும் மேலாக இந்த தேசத்தின் பாதுகாப்பு நலனையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று அப்போது அமித்ஷா ஜாட் தலைவர்களிடம் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து மேற்கு உ.பி.யில் அமித்ஷா பிரசாரம் மேற்கொள்கிறார்.

பாஜக தேர்தல் அறிக்கை
முன்னதாக லக்னோவில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை அமித்ஷா இன்று வெளியிட உள்ளார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் அனுராத் தாக்கூர், தர்மேந்திர பிரதான், துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்த தேர்தல் அறிக்கையிலும் ஜாட் சமூகத்தினர் வாக்குகளைக் கவரும் அறிவிப்புகள் இடம்பெறக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

கருத்து கணிப்புகள்
பொதுவாக கருத்து கணிப்புகளில் மேற்கு உ.பி.யில் பாஜகவே அதிக இடங்களைக் கைப்பற்றும் என்கின்றன கருத்து கணிப்புகள். இந்த பகுதியில் அகிலேஷின் சமாஜ்வாதி கட்சி கடும் போட்டியைத் தரும் என்கின்றன கணிப்புகள்.
-
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!











Click it and Unblock the Notifications