பிராமணர்களுக்கான பாதுகாப்பு- உ.பி. அரசை விமர்சிக்கும் பாஜக எம்எல்ஏ, எம்.பி.க்களுக்கு யோகி வார்னிங்
லக்னோ: பிராமணர்களுக்கான பாதுகாப்பு தொடர்பாக மாநில அரசை விமர்சிக்கும் பாஜக எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசுக்கு பிராமணர்களின் பாதுகாப்பு தொடர்பான விவகாரம் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் அமோக வெற்றியைப் பெற்ற பாஜக, பிராமணருக்கு முதல்வர் பதவி தராததில் தொடங்கியது சர்ச்சை.

அடுத்தடுத்த தேர்தல்களின் போது பிராமணர்களுக்கு முன்னுரிமை தருவோம் என்பது மட்டும் பாஜகவின் வாக்குறுதி. ஆனால் நடைமுறைப்படுத்துவதில்லை என்கிற கோபத்தில் இருக்கின்றனர் உ.பி. பிராமணர்கள்.
இதன் உச்சமாக நிழல் உலக தாதாவான, பிராமணர் ஜாதியை சேர்ந்த விகாஷ் துபே என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு மீதான பிராமணர்கள் கோபம் உக்கிரமடைந்தது.
இதனை காங்கிரஸ் கட்சி தற்போது அறுவடை செய்து வருகிறது. 2022-ல் மாநில சட்டசபை தேர்தலில் பிராமணர் ஒருவரையே முதல்வர் வேட்பாளராக அறிவிப்போம் என இப்போதே கூறி வருகிறது காங்கிரஸ். அத்துடன் பாஜகவை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்களும் பிராமணர் பாதுகாப்பு விவகாரத்தை முன்வைத்து யோகி அரசை சாடி வருகின்றனர்.
இதில் கடும் அதிருப்தி அடைந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் கூட்டத்தில் கடும் எச்சரிக்கையை விடுத்திருக்கிறார். சொந்த கட்சி எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் விமர்சனங்களால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது; இப்படியான போக்கை கைவிடாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
Recommended Video
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications