பஞ்சாப் காங்.-ல் அக்கப்போர்- சீட் கிடைக்காத கோபத்தில் முதல்வரின் சகோதரர் சுயேட்சையாக போட்டி!
லக்னோ: பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் மேலிடம் வாய்ப்பு தராதால் அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் சகோதரர் மனோகர்சிங் சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
117 இடங்களைக் கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு பிப்ரவரி 14-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
பஞ்சாப் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. முதல் கட்டமாக 86 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் 9 பேர் பெண்கள். அதாவது பெண்களுக்கு 10% இடங்களை காங்கிரஸ் ஒதுக்கி உள்ளது.

சரண்ஜித் சிங் சன்னி, சித்து
முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, சம்கவுர் சாஹிப் தொகுதியில் போட்டியிடுகிறார். கிழக்கு அமிர்தசரஸ் தொகுதியில் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நவ்ஜோத்சிங் சித்து போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் சுனில் ஜாகர் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் அவரது உறவினர் சந்தீப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாட்டியாலா தொகுதி?
பாட்டியாலா தொகுதி, முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங்கின் கோட்டை. அங்கு யாரை வேட்பாளராக நிறுத்துவது என்கிற குழப்பத்தில் உள்ளது காங்கிரஸ் மேலிடம். பொதுவாக ஒரு குடும்பத்தில் ஒருவருக்குதான் போட்டியிட வாய்ப்பு தருவது என காங்கிரஸ் மேலிடம் தீர்மானித்துள்ளது.

சுயேட்சையாகப் போட்டி
இதனால் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் சகோதரர் மனோகர் சிங்குக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. அரசு சீனியர் மருத்துவ அதிகாரியாக பணியாற்றிய மனோகர்சிங் தேர்தலில் போட்டியிடுவதற்காக அண்மையில் ராஜினாமா செய்திருந்தார். பாசி பதானா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடவும் அவர் விரும்பினார். தற்போது அவருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. இதனால் மனோகர்சிங் சுயேட்சையாக போட்டியிட இருக்கிறார். பஞ்சாப் துணை சபாநாயகர் அஜய்சிங்குக்கும் இந்த தேர்தலில் சீட் கொடுக்கப்படவில்லை. அவர் சுயேட்சையாக போட்டியிடுகிறாரா? என்பது தெரிவிக்கப்படவில்லை.

முதல்வர் வேட்பாளர் குறித்து சித்து
பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் என யாரும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் மாநில தலைவர் நவ்ஜோத்சிங் சித்து, பஞ்சாப் முதல்வரை டெல்லி மேலிடம் தீர்மானிக்க முடியாது; பஞ்சாப் மக்களே தீர்மானிப்பார்கள் என காட்டமாக கூறி பரபரப்பை கிளப்பி இருந்தார்.
-
காங்கிரசுக்கு ஒதுக்க சொல்வதா? அண்ணா அறிவாலயத்தில் அடித்துக்கொண்ட கிள்ளியூர் தொகுதி திமுக நிர்வாகிகள் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications