அதிர்ந்த ஆக்ரா.. குபுகுபுவென எரிந்த ரயில்! முழுமையாக கருகிய 2 பெட்டிகள் - பயணிகள் நிலை என்ன?
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே பாதல்கோட் எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பஞ்சாப் மாநிலம் பிரோஸ்பூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையம் - மத்திய பிரதேச மாநிலம் சியோனி ரயில் நிலையம் இடையே இயக்கப்படும் பாதால்கோட் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மதியம் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே பதாய் ரயில் நிலையத்தில் சென்று கொண்டு இருந்தது. அப்போது அந்த ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் 2 ரயில் பெட்டிகள் முழுமையாக தீயில் கருகி நாசமாகியுள்ளன.

ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரியும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் போராடி தீயை கட்டுப்படுத்தினார்கள். இதில் 2 பேர் காயமடைந்து இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்பு தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ரயிலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்திற்கான காரணமும் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த நிலையில் பாதால்கோட் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக இந்திய ரயில்வே விளக்கம் கொடுத்து உள்ளது.
At around 3:30 pm, two general coaches of Patalkot Express (14624) caught fire between #Agra Cantt & Bhandai junction station. No casualty as if now.#IndianRailway #UttarPradesh pic.twitter.com/ROmw8RIX1d
— Arvind Chauhan 💮🛡️ (@Arv_Ind_Chauhan) October 25, 2023
அதில், "ஆக்ரா - தோல்பூர் இடையே சென்று கொண்டு இருந்த பாதால்கோட் எக்ஸ்பிரஸ் ரயில் இருந்து புகை வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. ரயில் எஞ்சினில் இருந்து 4 வதாக இருக்கும் ஜிஎஸ் பெட்டியில் இருந்து புகை வந்தது தெரிந்தது. உடனடியாக அங்கேயே ரயில் நிறுத்தப்பட்டு தீ விபத்து ஏற்பட்ட கோச் மற்ற பெட்டிகளைவிட்டு பிரிக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
3.45 மணியளவில் ஆக்ரா ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்டு சென்றபோது லேசாக தீ விபத்து ஏற்படத் தொடங்கியது. தற்போது ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து இன்னும் தெரியவில்லை." என்றார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ரயில் தீ விபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நாட்டில் அடிக்கடி ஏற்படும் ரயில் விபத்து சம்பவம் பயணிகளை பீதி அடைய வைத்து உள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications