அதிர்ச்சி.. வாரணாசிக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற 5 தமிழர்கள் வெயில் தாங்க முடியாமல் ரயிலிலேயே மரணம்!
லக்னோ: உத்தரப்பிரதேசத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்றுவிட்டு ரயிலில் திரும்பிய தமிழகத்தை சேர்ந்தவர்களில் 5 பேர் வெப்பம் மற்றும் அனல் தாங்க முடியாமல் ரயிலிலேயே மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
கடுமையான வெயில் காரணமாக மக்கள் பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என வட மாநில வானிலை மையங்கள் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்தன. மேலும் மக்கள் அதிகளவு தண்ணீ பருக வேண்டும் என்றும் வெளியே செல்லும்போது பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

ஆன்மிக சுற்றுலா
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் வட மாநிலங்களுக்கு ரயிலில் ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளனர். காசி, கயா உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுவிட்டு ஆக்ராவில் இருந்து தமிழகம் திரும்பிக்கொண்டிருந்தனர்.

5 முதியவர்கள் பலி
கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் படுக்கை வசதி கொண்ட சாதாரண பெட்டியில் பயணம் செய்துள்ளனர். ஜான்சி என்ற இடத்தில் வந்த போது 5 பேருக்கு வெப்பத்தால் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பச்சையா, பாலகிருஷ்ணன், தெய்வானை, கலாதேவி, சுப்பையா ஆகிய 5 முதியவர்கள் உயிரிழந்தனர்.

நாளை ஒப்படைக்கப்படும்
அவர்களின் உடல் பிரதே பரிசோதனைக்காக ஜான்சி பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை செய்யப்பட்டு 5 பேரின் உடல்களும் நாளை உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 முதியவர்கள் பலி
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 48 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. இதன்காரணமாக ஏற்பட்ட வெப்பம் மற்றும் அனல் காற்றுக் காரணமாக தமிழகத்தை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 5 முதியவர்களும் மரணடைந்ததாக கூறப்படுகிறது.

அதிர்ச்சி, சோகம்
இருப்பினும் பிரேத பரிசோதனை செய்த பின்னரே மரணத்திற்கான முழு காரணமும் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்மீக சுற்றுலா சென்றவர்கள் உயிரிழந்த சம்பவம் அவர்களின் உறவினர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications