அத்திக் அகமது கொலை.. ரவுடியின் சகோதரி பக்கம் திரும்பிய உபி போலீசார்! தீவிர தேடுதல் வேட்டை! பதற்றம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பிரபல தாதாவாக இருந்த அத்திக் அகமது சமீபத்தில் கொடூரமாகக் கொல்லப்பட்டார். இதற்கிடையே இப்போது போலீசாருக்கு அவரது சகோதரி மீது கவனம் திரும்பியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, உத்தரப் பிரதேசத்தில் போலீசார் கஸ்டடியில் இருந்த பிரபல தாதா அத்திக் அகமது கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். ஊடகத்தினர் முன்னிலையில் இந்த கொடூர கொலை அரங்கேறியது.

உத்தரப் பிரதேசத்தில் பிரபல தாதாவாக இருந்தவர் அத்திக் அகமது. இவர் சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் சார்பில் எம்பி எம்எல்ஏவாகவும் இருந்தார். இவர் தான் சில நாட்களுக்கு முன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேசம்: மற்றொரு வழக்கில் அவரது சகோதரர் அஷ்ரப் அகமதும் சிறையில் இருந்தார். இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக பிரயாக்ராஜில் உள்ள மருத்துவமனைக்கு வந்த போது தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியது. செய்தியாளர்கள் போல இருந்த மூன்று பேர் அவர்கள் இருவரையும் சரமாரியாகச் சுட்டுத் தள்ளினர். இது உத்தரப் பிரதேசத்தில் சட்ட ஒழுங்கு எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதையே இது காட்டுவதாக அங்குள்ள எதிர்க்கட்சிகள் சாடினர்.
மேலும், இதனால் உத்தரப் பிரதேசத்தில் உடனடியாக 144 தடை உத்தரவு போடப்பட்டது. தாங்கள் பிரபலமாக வேண்டும் என்றே இந்த கொலையைச் செய்ததாகக் கைது செய்யப்பட்ட 3 பேர் ஷாக் வாக்குமூலமும் கொடுத்துள்ளனர். இதனிடையே போலீசாரின் கவனம் இப்போது அத்திக் அகமதின் சகோதரி ஆயிஷா நூரி பக்கம் திரும்பியுள்ளது. வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை ஆயிஷா நூரியும் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.
கொலை வழக்கு: உமேஷ் பால் கொலை வழக்கில் இவர்களது பெயரைக் குற்றவாளியாக உபி போலீசார் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி சேர்த்தனர். அப்போது முதலே ஆயிஷே நூரி அவரது தாயுடன் தலைமறைவாக உள்ளார். அத்திக் அகமதிற்கு மொத்தம் 4 சகோதரிகள் இருக்கும் நிலையில், அவர்களில் ஒருவரான ஆயிஷா ரவுடி சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. பிரயாக்ராஜில் உள்ள அதிக் அகமதுவின் சகோதரி வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்
இவரது கணவர் டாக்டர் அக்லக் அகமது. மீருட்டைச் சேர்ந்த அரசு மருத்துவரான அக்லக்கை கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதிதான் உபி சிறப்பு அதிரடிப் படை கைது செய்திருந்தனர்.
குஜராத்தின் சபர்மதி சிறையிலிருந்து பிரயாக்ராஜுக்கு அத்திக் அகமதை அழைத்துச் சென்றனர். ஆயிஷா அவர்களைப் பின்தொடர்ந்து வந்துள்ளார். அப்போது தான் ஆயிஷா மீது போலீசார் பார்வை திரும்பியுள்ளது.
-
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications