கிடுகிடுத்த உ.பி. பாஜக.. ஒரே நாளில் 60 மாவட்ட தலைவர்கள் தூக்கி அடிப்பு- லோக்சபா தேர்தல் வியூகமாம்!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரே நாளில் 60 மாவட்ட தலைவர்களை தூக்கிடி அடித்துள்ளது பாஜக. அத்துடன் மாநில நிர்வாகிகள் பலரையும் மாவட்ட தலைவர்களாக களமிறக்கி இருக்கிறது பாஜக
நாட்டிலேயே அதிக லோக்சபா தொகுதிகளைக் கொண்டது உத்தரப்பிரதேச மாநிலம். இம்மாநிலத்தில் மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன. பாஜக ஆளும் உ.பி.யில் 2019 தேர்தலில் அக்கட்சி 62 இடங்களைக் கைப்பற்றியது. சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி மொத்தம் 15 இடங்களில் வென்றது. பாஜகவின் கூட்டணி கட்சியான அப்னா தள்(எஸ்) 2, காங்கிரஸ் 1-ல் வென்றது. 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை ஒப்பிடுகையில் பாஜகவுக்கு சில இடங்கள் குறைவுதான்.

இம்முறை மொத்தம் உள்ள 80 தொகுதிகளையும் இலக்கு வைத்து களமிறங்கி இருக்கிறது பாஜக. ஆனால் எதிர்க்கட்சிகளோ "இந்தியா" கூட்டணி என்ற பெயரில் "பொதுவேட்பாளர்" பார்முலாவை கையில் எடுப்பதால் பாஜக நினைப்பது போல சுலபமாக வெற்றி பெற்றுவிட முடியாது என்பது யதார்த்தம். உ.பி.யில் தற்போது முடிவடைந்த கோசி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலே இதற்கு சாட்சி. "இந்தியா" கூட்டணியின் பொது வேட்பாளர் பார்முலாவிடம் பாஜக வீழ்ந்தது.
இதனால் பதற்றமடைந்துள்ள பாஜக உ.பி.யில் தமது வெற்றியை வலுவானதாக்கிக் கொள்ள அதிரடியில் இறங்கி இருக்கிறது. இதன் முதல் கட்டமாக ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் 60 மாவட்ட தலைவர்களை பாஜக தூக்கி அடித்துள்ளது. ஜாதி அடிப்படையில் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களுக்கு மாநில நிர்வாகிகளை தலைவர்களாக பாஜக களமிறக்கியிருப்பதன் மூலம் எவ்வளவு தீவிரமாக அக்கட்சி இருக்கிறது என்பது வெளிப்படுகிறது. குறிப்பாக எதிர்க்கட்சிகள் சென்ற தேர்தலில் வென்ற தொகுதிகளில் வலிமையான சக்திகளை மாவட்ட தலைவர்களாக்கி இருக்கிறது பாஜக.
தேர்தல் ஜூரம்!












Click it and Unblock the Notifications