லோக்சபா தேர்தல்.. மாறுமா களம்? உத்தர பிரதேசத்தில் வெல்லப்போவது யார்? India TV கருத்துக்கணிப்பு
லக்னோ: 80 நாடாளுமன்ற தெகுதிகளை கொண்ட நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் வரும் லோக்சபா தேர்தலில் எந்த கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்பது பற்றி இந்தியா டிவி - சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு சரியாக இன்னும் 10 மாதங்கள் கூட இல்லை என்பதால் தேர்தல் களம் தற்போதே கொதிக்க தொடங்கிவிட்டது. மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக உள்ளது. அதேவேளையில் பாஜகவை வீழ்த்திட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.

எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு "இந்தியா" என பெயர் வைத்துள்ளது. நாடு முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இந்தியா கூட்டணி போட்டியிட முடிவு செய்துள்ளது. தனித்தனியாக பிரிந்து இருந்தால் பாஜகவுக்கே களம் சாதகமாக மாறும் என்பதால் ஓருங்கிணைந்து எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் முடிவு செய்து இருக்கின்றன. இதற்காக பாட்னா மற்றும் பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூடி ஆலோசித்தன.
விரைவில் மும்பையில் எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. தேர்தல் களம் இப்படி பரபரத்துக் கொண்டு இருக்க கருத்துக்கணிப்புகளையும் செய்தி நிறுவனங்கள் தொடங்கி விட்டன. அந்த வகையில், இந்தியா டிவி -சிஎன்எஸ் இணைந்து நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்தியா முழுவதும் 23,871 ஆண்கள் மற்றும் 20,677 பெண்கள் என மொத்தம் 44,548 வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் முடிவுகளை இந்தியா டிவி வெளியிட்டுள்ளது.
மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 265 தொகுதிகளுக்கான முடிவினை நேற்று வெளியிட்டு இருந்த நிலையில், மீதமுள்ள 278 தொகுதிகளுக்கான கணிப்புகளை இன்று வெளியிட்டு வருகிறது. அதன்படி, பாஜகவின் கோட்டை என்று சொல்லப்படும் உத்தர பிரதேசத்தில் வரும் லோக்சபா தேர்தலில் யாருக்கு களம் சாதகமாக இருக்கும் என்றும் கருத்துக் கணிப்பு நடத்தி இந்தியா டிவி - சி.என்.எஸ் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தை பொறுத்தவரை நாட்டிலேயே பெரிய மாநிலம் ஆகும். இங்கு 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில், தேசிய ஜனநாயக கூட்டணி 73 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, அப்னா தால், எஸ்.பி.எஸ்.பி ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட உள்ளன.
இதில் பாஜக மட்டும் 70 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகள் 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெறலாம் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சமாஜ்வாதி கட்சி + ஆர்.எல்.டி கட்சிகள் முறையே 4 மற்றும் 1 இடத்திலும் காங்கிரஸ் கட்சி 2 இடத்தில் வெற்றி பெறலாம் என்றும் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது பாஜக 62 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் தற்போது India TV-CNX கருத்துக் கணிப்பில் பாஜக கடந்த முறையை விட வரும் தேர்தலில் அதிக இடங்களை வெல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications