பர்தா அணிய மறுத்ததால் மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்! அப்பாவி பிஞ்சுகளின் நிலைமையும் இப்படி ஆயிடுச்சே!
லக்னோ: பர்தா அணியாத மனைவியை, கணவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மனைவியை கொலை செய்ததை நேரில் பார்த்ததால், இரண்டு குழந்தைகளையும் அவர் கொலை செய்திருக்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லியில் கான்ட்லா காவல் நிலையத்திற்குட்பட்ட கர்ஹி கிராமத்தைச் சேர்ந்தவர் ஃபாரூக். இவருக்கு திருமணமாகி 32 வயதில் தாஹிரா எனும் மனைவியும், அஃப்ரீன் (14) மற்றும் செஹ்ரீம் (7) என இரண்டு மகள்களும் இருக்கின்றனர்.

கடந்த டிச.9ம் தேதி முதல் தாஹிரா மற்றும் இரண்டு குழந்தைகளையும் காணவில்லை என்று, ஃபாரூக்கின் தந்தை நேற்று போலீசில் புகார் அளித்திருக்கிறார். புகாரை விசாரித்த போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதாவது தாஹிரா, தனது தாய் வீட்டிற்கு கடந்த டிச.9ம் தேதி புறப்பட்டு சென்றிருக்கிறார். வெளியில் போகும்போது பர்தா அணிந்து செல்லுமாறு கணவர் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். ஆனால், தாஹிரா கேட்கவில்லை. தாய் வீட்டுக்கு போகும்போது இந்த விவகாரம் தொடர்பாக சண்டை வெடித்திருக்கிறது.
சண்டை ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியிருக்கிறது. ஆத்திரமடைந்த ஃபாரூக், துப்பாக்கியை எடுத்து மனைவி தாஹிராவை சுட்டிருக்கிறார். இதனால் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து துடிதுடித்து அவர் உயிரிழந்திருக்கிறார். இதனை பார்த்து உதவிக்கு வந்த மகள் அஃப்ரீனையும் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். அதேபோல இந்த கொலையை நேரில் பார்ப்பதற்காக இரண்டாவது மகள் செஹ்ரீமை கழுத்து நெறித்து கொலை செய்திருக்கிறார்.
இந்தக் கொடூரச் செயலை ஃபாரூக் முன்னரே திட்டமிட்டிருந்தது விசாரணையில் வெளிவந்துள்ளது. வீட்டின் முற்றத்தில் ஏழு அடி ஆழமான பள்ளத்தை அவர் தோண்டி வைத்திருந்தார். அங்கே சடலங்களைப் புதைத்து, அதற்கு மேல் செங்கற்களால் மூடியுள்ளார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலங்களை வெளியே எடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தான் நிதி நெருக்கடியில் இருந்ததாகவும், பணப் பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து வாக்குவாதங்கள் ஏற்பட்டதாகவும் ஃபாரூக் ஒப்புக்கொண்டார். இந்த வாக்குவாதங்களும், பர்தா அணியாமல் தாஹிரா தனது பெற்றோரைச் சந்திக்க சென்ற சம்பவமும் சேர்ந்து இந்த பயங்கரமான கொலைகளுக்குத் தூண்டுகோலாக அமைந்ததாக ஃபாரூக் வாக்குமூலம் அளித்துள்ளார்.
வேலையின்மை, ஊதிய உயர்வு இல்லாதது, குறைவான ஊதியம், விலைவாசி உயர்வு போன்றவை நாடு முழுவதும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல பர்தா அணியாதது தொடர்பான பிரச்சனையும் சேர்ந்து கொலை செய்ய தூண்டியிருக்கிறது. இந்த சம்பவம் உத்தரப் பிரதேசம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications