"எதுக்கு தாடி வச்சீங்க".. முஸ்லீம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்.. உ.பியில் அராஜகம்!
தாடி வைத்திருந்த இஸ்லாமிய போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்
லக்னோ: தாடி வைத்ததற்காக ஒரு இஸ்லாமிய காவல்துறை துணை ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்... இப்படி ஒரு கொடுமை உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
உபி மாநிலம் பாக்பத் மாவட்டத்தை சேர்ந்தவர் இந்த சார்அலி.. ரமலா பகுதியில் உள்ள ஸ்டேஷனில் துணை ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் நீண்ட தாடி ஒன்று வைத்திருக்கிறார்... அந்த தாடியுடன்தான் வேலை பார்த்து வந்தார்.. இந்நிலையில், இவரை திடீரென பாக்பத் மாவட்டத்தின் காவல்துறை தலைமை அதிகாரி அபிஷேக் சிங் இவரை சஸ்பெண்ட் செய்துவிட்டார்.. இதற்கு காரணம், உரிய அனுமதியின்றி தாடி அலி, தாடி வைத்திருந்தாராம்.
இது குறித்து எஸ்பி அபிஷேக் சிங் சொல்லும்போது, "கடந்த 3 வருஷமாக அலி போலீசாக இங்கு வேலை பார்த்து வருகிறார்.. ஆனால், அதிகாரிகளின் அனுமதியில்லாமல் நேற்று முதல் அலி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்... பலமுறை அவருக்கு சொல்லியாச்சு. நிறைய முறை அட்வைஸ் செய்தும், அவர் விதிகளை மீறி இப்படி நடந்து கொண்டுள்ளார்.
தாடி எடுக்கணும் அல்லது தாடி வைத்துக்கொள்ள உயரதிகாரிகளின் ஒப்புதலையாவது பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தினோம். இது சம்பந்தமாக அவருக்கு ஏற்கனவே நோட்டிசும் அனுப்பப்பட்டிருக்கு.. இருந்தாலும் அதை அவர் கண்டுகொள்ளவே இல்லை" என்றார்.
நடந்த சம்பவம் குறித்து இந்தசார் அலி சொல்லும்போது, "1994 ல் கான்ஸ்டபிளாக வேலைக்கு சேர்ந்தேன்.. அப்பவே லேசான தாடி இருந்தது.. அந்த தாடி இப்போது நீளமாகிவிட்டது.. அவ்வளவுதான்.. சென்ற வருடம் நான் லீவு கேட்டபோது, சூப்பிரண்ட் பிரதாப் கோபேந்திர யாதவ் என்னிட்ட என்னுடைய நீளமான தாடி பற்றி கேட்டார்..
நான் எத்தனையோ இடத்தில் வேலை பார்த்திருக்கிறேன்.. ஆனால் அங்கெல்லாம் எனக்குஇப்படி ஒரு பிரச்சனை வந்தது இல்லை.. இந்த தாடி சம்பந்தமாக நான் பலமுறை பெர்மிஷன் கேட்டு லெட்டர் அனுப்பியிருக்கேன்.. ஆனாலும் அதில் ஒன்றிற்கு கூட இதுவரை பதில் இல்லை" என்றார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications