உத்தர பிரதேசத்தில் ஷாக்.. முஸ்லிம் தம்பதி படுகொலை! இந்து பெண்ணுடன் ஓடிய மகனால் வெறிச்செயல்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் மகன் இந்து பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடியதால் அவரது பெற்றோரை ஒரு கும்பல் வீடு புகுந்து இரும்பு கம்பியால் தாக்கி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் சிதாபூர் அருகே உள்ள ராஜியூர் கிராமத்தில் வசித்து வந்தவர் அப்பாஸ். இவரது மனைவி கம்ரூல் நிஷா. இந்த தம்பதிக்கு மகன் ஒருவர் உள்ளார். இவர்களின் வீடு அருகே வசித்து வருபவர் சவுகத் ராம்பால். இவருக்கு மகள் உள்ளார்.

இந்நிலையில் தான் அப்பாஸ்-கம்ரூல் நிஷா தம்பதியின் மகனுக்கும், சவுகத் ராம்பாலின் மகளுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் தான் கடந்த 2020ம் ஆண்டில் அப்பாஸ் மகன், சவுகத் ராம்பாலின் மகளுடன் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இதையடுத்து சவுகத் ராம்பால் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ஓடிப்போன ஜோடியை போலீசார் மீட்டனர். அந்த சமயத்தில் அந்த பெண் 18 வயது நிரம்பாத மைனர். இதனால் அந்த பெண்ணின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து அப்பாஸின் மகனை கைது செய்தனர்.
இந்நிலையில் தான் அப்பாஸின் மகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்தார். இதையடுத்து அவர் சவுகத் ராம்பாலின் மகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்று திருமணம் செய்து கொண்டார். இதனால் சவுகத் ராம்பாலின் குடும்பத்தினர் கடும் கோபம் அடைந்தனர். மேலும் பழிவாங்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் சவுகத் ராம்பால் உள்பட சிலர் அப்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். அங்கிருந்த அப்பாஸ் மற்றும் அவரது மனைவி கம்ரூல் நிஷா ஆகியோரை கொடூரமாக தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் இருவரும் இறந்தனர். இதையடுத்து கொலையாளிகள் அங்கிருந்து எஸ்கேப் ஆனார்கள்.
சம்பவம் குறித்த அறிந்த போலீசார் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இரட்டை கொலை தொடர்பா போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுகத் ராம்பால் உள்பட 3 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications