தரிசு நிலங்களை விவசாய நிலமாக மாற்ற புதிய திட்டம்.. முழுவீச்சில் களம் இறங்கும் உத்தரப் பிரதேசம்!
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் முயற்சியில் மாநில அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில் தரிசு நிலங்களை வளமான நிலமாக மாற்ற யோகி ஆதித்யநாத் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் தரிசு நிலங்களை வளமான நிலமாக மாற்ற நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்.

மாநிலம் முழுவதும் தரிசு நிலங்களை மேம்படுத்துதல், மண்ணின் ஆரோகியத்தை அதிகரித்தல், வேளாண் மையங்களை நிறுவுதல் உள்ளிட்டவற்றிற்காக பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா கிசான் சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.5.7 கோடியை யோகி ஆதித்யநாத் அரசாங்கம் ஒதுக்கியிருக்கிறது. கான்பூரில் உள்ள சந்திரசேகர் ஆசாத் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சிறப்பு மையத்தை நிறுவ ரூ.50 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டது மட்டுமல்லாது, இதனை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரடியாக கண்காணித்து வருகிறார். தரிசு நிலங்களை நன்செய் நிலங்களாக மாற்ற முன்வரும் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உடனடியாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டம் குறித்து அதிகாரிகள் கூறுகையில்,
"உத்தரப் பிரதேசம் பொருளாதாரத்தில் இந்தியாவுக்கே முன்மாதிரியாக வளர்ந்து வருகிறது. அதே நேரத்தில் மாநிலம் முழுவதும் உள்ள நிலங்களை வேளாண் தொழிலுக்கு ஏற்றார் போல் மாற்றி உணவு உற்பத்தியிலும் சாதனை படைக்க யோகி ஆதித்யநாத் முயன்று வருகிறார். அதற்காகதான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த திட்டம் நிச்சயம் வெற்றியடையும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications