பாஜக சதி.. டெல்லியில் என் ஹெலிகாப்டரை நிறுத்திட்டாங்க.. அகிலேஷ் யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு
ஹெலிகாப்டரில் செல்ல பாஜக அனுமதிக்கவில்லை என்று அகிலேஷ் குற்றஞ்சாட்டி உள்ளார்
லக்னோ: இன்று, டெல்லியில் இருந்து முசாபர்நகருக்கு ஹெலிகாப்டரில் செல்ல தன்னை அனுமதிக்கப்படவில்லை என்று அகிலேஷ் யாதவ் பாஜக மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கின்றன.
பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதிவரை 7 கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி என தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது... எனினும், பாஜகவுக்கும் சமாஜ்வாதிக்கும் நேரடியாக போட்டி வலுவாக இருப்பதாக கூறப்படுகிறது.

அகிலேஷ்யாதவ்
இதுவரை கள நிலவரத்தை பார்க்கும்போது, உபியின் பல்வேறு பகுதிகளில் அகிலேஷ் யாதவுக்கு ஆதரவுகள் பெருகி வருவதாக கூறப்படுகிறது.. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில், பெரும்பாலும் பாஜகதான் வெற்றி வாகை சூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும், சமாஜ்வாதி கட்சியின் ஆதரவு பன்மடங்காக பெருகி வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.. அதனால்தான், அடிமட்ட அளவுக்கு கீழே இறங்கி பாஜக மேலிட தலைவர்களும் வீடு வீடாக பிரச்சாரம் செய்யும் நிலைமை வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

அகிலேஷ்
மேலும் எங்கு சென்றாலும் அகிலேஷ் மீதான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்கள்.. இந்நிலையில், அகிலேஷ் யாதவ் பாஜக மீது ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.. இன்று பிற்பகல் தனது ஹெலிகாப்டரில் டெல்லியில் இருந்து உபியின் முசாபர்நகருக்கு செல்ல அனுமதிக்கவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார்.

இந்தியில் ட்வீட்
இது தொடர்பாக ஒரு ட்வீட்டை ஹிந்தியில் பதிவிட்டுள்ளார்.. அதில், "என்னுடைய ஹெலிகாப்டர் எந்த காரணமும் இல்லாமல் டெல்லியில் நிறுத்தப்பட்டுள்ளது... அது உபியில் உள்ள முசாபர்நகருக்கு பறக்க அனுமதிக்கப்படவில்லை... அப்படி செய்வதற்கு எந்த காரணமும் தெரிவிக்கப்படவுமில்லை.. ஆனால் ஒரு பாஜகவின் உயர்மட்ட தலைவர் மட்டும் இங்கிருந்து ஹெலிகாப்டரில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.. இதற்கு பாஜகதான் காரணம்.. பாஜக விரக்தியில் உள்ளது.. அதற்கு ஒரு உதாரணம் தான் இது..
Recommended Video

பரபரப்பு
ஆனால், மக்கள் எல்லாவற்றையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. மக்களுக்கு எல்லாம் தெரியும்" என்று பதிவிட்டுள்ளார்.. அத்துடன், தடுத்து நிறுத்தப்பட்ட தன்னுடைய ஹெலிகாப்டர் முன்பு, நின்று கொண்டிருக்கும் தன்னுடைய போட்டோவையும் ட்வீட்டில் ஷேர் செய்துள்ளார்.. தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், அகிலேஷ் வைத்துள்ள இந்த குற்றச்சாட்டு உபியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications