பள்ளிக்கூடத்தில் மாடுகள்… தெருவில் திரியும் மாணவர்கள்.. உ.பி.யில் இதென்ன கூத்து
லக்னோ:உத்தரப்பிரதேசத்தில் தெருவில் சுற்றித்திரியும் மாடுகளை பள்ளிக் கூடத்தில் கட்டி வைத்துள்ளதால், மாணவர்கள் பள்ளி செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கல்விச்சாலைகள் தந்த ஏழைத் தலைவனை தினமும் நினையுங்கள் என்ற வரிகள் கொண்ட திரைப்பட பாட்டு ஒன்று. மனிதனை மனிதாக்க உதவுவது கல்வி என்பதால்... அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அரசே பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ஆனால்... உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்து வரும் கூத்தால்... பள்ளி மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியேற்றதில் இருந்து, மனிதர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ... இல்லையோ.. மாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், மாடுகள் சித்ரவதை செய்வதை தடுக்க பல புதுப்புது ஐடியாக்களை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தெருவில் சுற்றித்திரியும் மாடுகளை அரசு மருத்துவமனைகளில், பள்ளிக்கூட வளாகத்தில் கட்டி வைக்கும் முயற்சியில் யோகி ஆதித்யநாத் அரசு இறங்கியுள்ளது.
பண்டா என்ற பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அனாதையாக சுற்றித்திரிந்த 100க்கும் மேற்பட்ட மாடுகள் கட்டி வைக்கப்பட்டுள்ளன. அதனால், மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
Banda: Students of Bisanda's Singhpur Mafi middle school say studies affected as cows have been tied in campus. Villagers(pic 3)say cows are from adjacent villages&used to destroy crops. Police say, "Villagers have been asked to vacate campus. Cows shifted to cow shelter" (12.01) pic.twitter.com/rGPTosrt7a
— ANI UP (@ANINewsUP) January 13, 2019
பயில வேண்டிய மாணவர்கள் தெருவிலும்... தெருவில் திரிய வேண்டிய மாடுகள் பள்ளிக் கூடத்திலும் உள்ளன. இதை பார்க்கும் போது அடக் கொடுமையே.. என்று தான் நினைக்க தோன்றுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications