உத்தர பிரதேசத்தில் திடீர் வன்முறை.. கார், வாகனங்களுக்கு தீ வைத்த பீம் ஆர்மி அமைப்பினர்!
லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் ஆசாத் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் சந்திரசேகர் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் அறிந்து அவரது பீம் ஆர்மி அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் சந்திரசேகரின் பீம் ஆர்மி அமைப்பினர் நேற்று திடீரென கலவரத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆசாத் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரான சந்திரசேகர் நேற்று கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த தவறான தகவல் காரணமாகவே இந்த கலவரம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் தலித் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறது ஆசாத் சமாஜ் கட்சி. இதன் தேசிய தலைவராக உள்ள சந்திரசேகர் பீம் ஆர்மி என்ற அமைப்பை நிறுவி அதன் மூலம் தலித் இளைஞர்களை ஒன்றிணைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். சமீபத்தில் இவர் உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணை சந்திக்க சென்றபோது கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியது.
இதனால் அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று 5 மணி நேரம் இந்த கலவரம் நடந்தது. சந்திரசேகர் கைது செய்யப்பட்டதாக வெளியான ஒரு தவறான தகவலே இந்த வன்முறைக்கு காரணம் ஆகும். அவரது ஆதரவாளர்கள் 15 க்கும் மேற்பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர். பல வாகனங்களை சாலையில் கவிழ்த்து, இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

இந்த வன்முறையின் போது மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் செய்வதறியாது திகைத்து நின்றனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications