கல்லூரி மாணவி உயிருடன் எரிப்பு.. நடுரோட்டில் நிர்வாண நிலையில் கிடந்த கொடூரம்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மர்ம கும்பல், அதற்கு மாணவி உடன்படாமல் கடுமையாக எதிர்த்ததால் அவரை தீ வைத்து எரித்துள்ளது. நிர்வாண நிலையில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய மாணவியை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீப நாட்களாக சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.

அண்மையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள உன்னாவில் ஒரு தலைக்காதலால் விஷம் கொடுத்து இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டனர். இன்னொரு மாணவி உயிருக்கு போராடியபடி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், தற்போது கல்லூரி மாணவி தீ வைத்து எரிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாணவி படுகாயம்

மாணவி படுகாயம்

உத்தரப்பிரதேச மாநிலம் ஷஜகான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் மாலை கல்லூரி மாணவி ஒருவர் நிர்வாண நிலையில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடினார் . அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இது தொடர்பாக போலீசாரிடம் பாதிக்கப்பட்ட மாணவி வாக்குமூலம் அளித்தார். அவர் கூறுகையில். ராய்கேடா பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் 3 பேர் என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தனர். அது தோல்வி அடைந்ததால் அவர்கள் என் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தினார்கள் என்று தெரிவித்துள்ளார்.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

போலீசார் மாணவியின் கல்லூரியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மாணவியின் செல்போன் அழைப்புகளில் உள்ள எண்கள், கல்லூரி நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை


இதற்கிடையே உத்தரப்பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தில் 16 வயது தலித் சிறுமியை கடந்த ஞாயிறன்று கல்லு ராஜ்புத் என்பவர் அடித்து இழுத்துசென்றுள்ளார். பின்னர் அவரது வீட்டில் அடைத்து வைத்து சிறுமியை ரோஹித் யாதவ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அடுத்தடுத்து உபியில் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+