பிற மாநிலங்களில் தவிக்கும் உ.பி. தொழிலாளர்கள் ஒவ்வொரு கட்டமாக மீட்பு- தனிமைப்படுத்துதலில் 2 வாரம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: கொரோனா லாக்டவுனால் பிற மாநிலங்களில் தத்தளித்து வரும் தங்களது மாநில தொழிலாளர்களை ஒவ்வொரு கட்டமாக திரும்ப அழைத்துவர உத்தப்பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் அப்படி அழைத்து வரப்படும் தொழிலாளர்களை குறைந்தபட்சம் 2 வாரம் தனிமைப்படுத்தி வைக்கவும் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

Recommended Video

    இந்தியாவில் கொரோனா second wave தாக்கும்

    இது தொடர்பாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று கூறியதாவது:

    UP Labourers to be Brought Back from Other States

    பிற மாநிலங்களில் தவித்து வரும் உத்தரப்பிரதேச தொழிலாளர்களின் விவரங்களை அதிகாரிகள் சேகரிக்கின்றனர். இவர்கள் ஒவ்வொரு கட்டமாக திரும்ப அழைத்துவரப்படுவர்.

    உத்தரப்பிரதேச எல்லையில் அனைத்து தொழிலாளர்களுக்கும் பரிசோதனை நடத்தப்படும்.. பின்னர் அழைத்துவரப்படும் அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். இதனைத் தொடர்ந்தே சொந்த கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

    14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்குப் பின்னர் அந்த தொழிலாளர்களுக்கு ரூ1,000 உதவித் தொகையும் ரேஷன் பொருட்களும் வழங்கப்படும். இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.

    உத்தரப்பிரதேசத்தில் கொரோனாவால் இதுவரை 1604 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா தொற்று நோய்க்கு 24 பேர் மரணித்துள்ளனர். கொரோனா பாதித்த 206 பேர் குணமடைந்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+