பிற மாநிலங்களில் தவிக்கும் உ.பி. தொழிலாளர்கள் ஒவ்வொரு கட்டமாக மீட்பு- தனிமைப்படுத்துதலில் 2 வாரம்
லக்னோ: கொரோனா லாக்டவுனால் பிற மாநிலங்களில் தத்தளித்து வரும் தங்களது மாநில தொழிலாளர்களை ஒவ்வொரு கட்டமாக திரும்ப அழைத்துவர உத்தப்பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் அப்படி அழைத்து வரப்படும் தொழிலாளர்களை குறைந்தபட்சம் 2 வாரம் தனிமைப்படுத்தி வைக்கவும் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
Recommended Video
இது தொடர்பாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று கூறியதாவது:

பிற மாநிலங்களில் தவித்து வரும் உத்தரப்பிரதேச தொழிலாளர்களின் விவரங்களை அதிகாரிகள் சேகரிக்கின்றனர். இவர்கள் ஒவ்வொரு கட்டமாக திரும்ப அழைத்துவரப்படுவர்.
உத்தரப்பிரதேச எல்லையில் அனைத்து தொழிலாளர்களுக்கும் பரிசோதனை நடத்தப்படும்.. பின்னர் அழைத்துவரப்படும் அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். இதனைத் தொடர்ந்தே சொந்த கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்குப் பின்னர் அந்த தொழிலாளர்களுக்கு ரூ1,000 உதவித் தொகையும் ரேஷன் பொருட்களும் வழங்கப்படும். இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.
உத்தரப்பிரதேசத்தில் கொரோனாவால் இதுவரை 1604 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா தொற்று நோய்க்கு 24 பேர் மரணித்துள்ளனர். கொரோனா பாதித்த 206 பேர் குணமடைந்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications