"பப்ஜி காதல்.." எல்லை கடந்த பாக். பெண்ணுக்கு உளவு அமைப்புடன் தொடர்பு? பெரும் பரபரப்பு! தீவிர விசாரணை
லக்னோ: பப்ஜி காதனுக்காக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த சீமாவுக்கு ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் இப்போது உபி போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சீமா ஹைதர் என்ற 27 வயதான பெண்ணுக்கு பப்ஜி மூலம் உத்தரப் பிரதேச நொய்டாவை சேர்ந்த சச்சின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கராச்சியில் வசிக்கும் சீமாவுக்கு ஏற்கனவே குலாம் ஹைதர் என்பவருடன் திருமணம் நடந்து குழந்தைகளும் இருக்கிறதாம்.

இருப்பினும், சச்சின் மீது வந்த காதல் அவரை எல்லைகளைக் கடக்க வைத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் காதலை வளர்த்த இந்த ஜோடி வாழ்க்கையிலும் ஒன்றாக இருக்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.
சீமா: இதற்காக சீமா பாகிஸ்தானில் தனக்குச் சொந்தமான நிலத்தை விற்று, அதனஅ மூலம் நேபாளம் வந்து அங்கிருந்து இந்தியாவுக்குள் வந்துள்ளார். மேலும், சச்சினும் சீமாவும் இணைந்து நொய்டாவில் ஒன்றாகவும் வாழ ஆரம்பித்துள்ளனர். உரிய விசா இல்லாமல் பாக். நாட்டை சேர்ந்த இந்தப் பெண் இந்தியாவுக்குள் வந்து வசித்து வருகிறார். இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியது.
இருப்பினும், தனக்கு பாக். செல்ல விருப்பம் இல்லை என்றும் சச்சின் உடன் இணைந்தே வாழ விரும்புவதாக அவர் தொடர்ந்து கூறி வந்தார். இதற்கிடையே உத்தரப் பிரதேச போலீசின் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் இன்று மீண்டும் பாகிஸ்தானைச் சேர்ந்த இந்த சீமா ஹைதர் மற்றும் அவரது காதலர் சச்சின் மீனாவின் தந்தை நேத்ரபால் சிங் ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.. கிரேட்டர் நொய்டாவுக்கு அழைத்துச் சென்ற போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
6 மணி நேரம் விசாரணை: முன்னதாக நேற்று திங்கள்கிழமையும் சுமார் ஆறு மணி நேரம் போலீசாரால் அவர்கள் விசாரிக்கப்பட்டனர். கடந்த மே மாதம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த சீமா, தற்போது தனது இந்திய காதலன் சச்சினுடன் கிரேட்டர் நொய்டாவில் வசித்து வருகிறார். அவர் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டின் உளவுத்துறை நிறுவனமான ஐஎஸ் அமைப்புடன் அவருக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சீமா ஹைதரின் மொபைல் டேட்டாக்கள் டெலிட் செய்யப்பட்ட நிலையில், இப்போது அதை தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதில் கிடைக்கும் தகவல்கள் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சீமாவின் மாமாவும் சகோதரரும் பாகிஸ்தான் ராணுவத்துடன் தொடர்புடையவர்கள் என்பதால், சீமாவின் மொபைல் டேட்டாவில் இருக்கும் தகவல்கள் முக்கியமானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது..
விசாரிப்பது யார்: மேலும், உரிய விசா இல்லாமல் சீமா இந்தியாவுக்குள் நுழைந்தது குறித்தும் தற்போது விசாரணை நடந்து வருகிறது. அவரது பாஸ்போர்ட், ஆதார் அட்டை மற்றும் அவரது குழந்தைகள் தொடர்பான பிற ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே இன்று இரண்டாவது நாளாக அவர்களிடம் விசாரணை தொடர்ந்து வருகிறது.
இந்த விசாரணையை உபி-இன் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் நேரடியாக விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணைக்கும் உள்ளூர் போலீசாருக்கும் தொடர்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. உபி-இல் உள்ள வலதுசாரி குழு ஒன்று சீமா அடுத்த 72 மணி நேரத்திற்குள் பாகிஸ்தான் சென்றுவிட வேண்டும் என்றும் இல்லையென்றால் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் பகிரங்கமாக மிரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை, உபி தலைநகர் லக்னோவில் இருந்த ஐஎஸ்ஐ ஏஜெண்டை போலீசார் கைது செய்தனர். அவர் இந்தியாவின் பாதுகாப்பு சார்ந்த முக்கிய தகவல்களைத் திருடி பாக். நாட்டிற்கு அனுப்பியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
-
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
அது வேற வாய்.. இது வேற வாய்! பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான்! அடுத்த நாளே திடீர் ட்விஸ்ட்! என்ன? -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள்












Click it and Unblock the Notifications