Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரளயத்தை கிளப்பிய புஷ்கர்.. பொது சிவில் சட்டம் உத்தரகாண்டில் விரைவில் அமல்! முதல்வர் பேச்சால் பரபர

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரகாண்ட் மாநிலத்தில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்து உள்ளார்.

மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவின் கடந்த 15 ஆண்டுகால கனவு திட்டமாக இருந்து வருகிறது பொது சிவில் சட்டம். இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. கடந்த மாதங்களுக்கு முன் அதற்கான பணிகளை தொடங்கியது மத்திய அரசு. இது தொடர்பாக கடிதம் மூலமாகவும் இணையம், ஈ மெயில் மூலமாக கருத்து தெரிவிக்கலாம் என்று மக்களிடமும் கருத்து கேட்டது மத்திய அரசு.

Uttarakhand CM Pushkar Singh Dhami said that the Uniform Civil Code will be implemented soon

பல லட்சக்கணக்கானோர் இதற்காக கருத்து தெரிவித்த நிலையில், கருத்து சொல்வதற்கான கால அவகாசத்தையும் நீட்டித்தது. மத்திய அரசு கொண்டு வர முயலும் இந்த பொதுசிவில் சட்டத்துக்கு எதிர்கட்சிகள், இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகளும் தொடக்கத்தில் இருந்தே கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டின் கீழ் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், ஜெயின், பார்ஸி, பௌத்த மதத்தினர் அவரவர் தங்கள் மத சட்டங்களை பின்பற்றி வரும் நிலையில் இதை பொது சிவில் சட்டமாக மாற்றுவது அனைத்து மதத்தினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்து வருகிறது.

குறிப்பாக இந்த பொது சிவில் சட்டம் காரணமாக சிறுபான்மையினரின் மத சுதந்திரம் பறிக்கப்படும் என அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் இந்த சட்டத்துக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்தியாவிலேயே முதல் முறையாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பொதுசிவில் சட்டம் விரைவில் அமலுக்கு வர இருக்கிறது. இதை அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்து இருக்கிறார்.

மத்திய அரசு இது தொடர்பாக கருத்து கேட்பதற்கு முன்பே முதல் மாநிலமாக உத்தரகாண்டில் பொது சிவில் சட்டத்தை உருவாக்கி அமல்படுத்துவதற்கான குழு அமைத்து அம்மாநில முதலமைச்சர் உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பொது சிவில் சட்ட மசோதா உத்தரகாண்ட் மாநில சட்டப் பேரவையில் விரைவில் தாக்கல் செய்யப்படும். பொது சிவில் சட்டம் என்பது அனைத்து மதத்தினருக்கும் பொதுவான மதமாகும்.

ராம பக்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் ஆட்சியில் இருந்திருந்தால் அயோத்தியில் ராமர் கோயிலை கட்டி எழுப்பி இருக்க மாட்டார்கள். ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டப் பிரிவு 370 ஐ ரத்து செய்திருக்க மாட்டார்கள். முத்தலாக் முறையை ஒழித்து இருக்க மாட்டார்கள். அயோத்தியில் ராம ஜென்ம பூமியை கட்டி எழுப்ப வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் பொறுப்பு ஜனவரி 22 ஆம் தேதி முழுமை பெறுகிறது. ராம ஜென்மபூமி போராட்டத்தின்போது சாத்வி ரிதாம்பராவின் பேச்சுக்கள் என்னை ஈர்த்தன." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+