ஷூலேஸ் கட்ட வச்சதே தப்பு.. இதுல அமைச்சர் கொடுத்த வியாக்கியானத்தை பாருங்க!
லக்னோ: "இதையெல்லாம் எதுக்குப்பா தப்பா பாக்கறீங்க.. ராமனின் செருப்பை வெச்சுக்கிட்டே ஆட்சி நடத்திய நாடுதானே இது.. பாராட்டுங்க" என்று அரசு அதிகாரியை ஷூலேஸ் கட்ட வைத்த அமைச்சர் ஒருவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நேத்து சர்வதேச உலக யோகா தினம்.. அதன்படி நாடு முழுவதும் யோகா நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. அப்படித்தான் உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரிலும் யோக நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறுபான்மையினர் துறை அமைச்சர் லட்சுமி நாராயண் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நிகழ்ச்சியை முடித்துவிட்டு, கிளம்பியபோது, அவரது கால் ஷூவில் இருந்த லேஸ் அவிழ்ந்துவிட்டது. இதை பார்த்த அங்கிருந்த ஒரு அரசு அதிகாரி, அமைச்சரின் காலுக்கடியில் உட்காந்து ஷூ லேஸை கட்டிவிட்டார்.
#WATCH: UP Minister Laxmi Narayan gets his shoelace tied by a government employee at a yoga event in Shahjahanpur, yesterday. pic.twitter.com/QbVxiQM7bI
— ANI UP (@ANINewsUP) June 22, 2019
இதுபோல பல தலைவர்களுக்கு எத்தனையோ பேர் இப்படி உதவி உள்ளனர். அவ்வளவு எதற்கு? வயநாட்டில் ராகுல்காந்தி வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு, பேரணியாக சென்றபோது கூட்ட நெரிசலில் 3 பத்திரிகையாளர்களுக்கு காயம் ஏற்பட்டது.
அவர்களை ஆம்புலன்சில் ஏற்றும்போது, கீழே விழுந்த பத்திரிகையாளரின் ஷூக்களை பிரியங்கா காந்தி எடுத்து கையில் வைத்திருந்தார். அதனால் இது ஒரு வகையில் உதவி என்று எடுத்து கொண்டாலும், அமைச்சர் இதற்கு வேறு மாதிரியான பதிலை தந்துள்ளார்.
அதிகாரி ஷூ லேஸ் கட்டிவிட்டதற்கு "ராமனின் செருப்பை வைத்தே ஆட்சி நடத்திய நாடு இது. அந்த மாதிரி இதை ஒரு சகோதரரின் உதவியாக பாருங்கள், பாராட்டுங்கள்" என்று சொன்னார். சும்மா போயிருந்தால் ஆவது பரவாயில்லை.. இப்படி ஒரு மேட்டரை கொளுத்தி போட்டு விடவும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications