பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் நோ காம்ப்ரமைஸ்! சட்டம் ஒழுங்கில் உ.பிதான் டாப் என யோகி பெருமிதம்
லக்னோ: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது உத்தரப் பிரதேச காவல்துறை எவ்வித சமரசமும் இன்றி உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதாக யோகி ஆதித்யநாத் பெருமிதம்.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக வட மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இந்த எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகின்றன. எனவே இந்த எண்ணிக்கையை குறைக்குமாறு மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு வருகிறது. அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநில அரசு இக்குற்றங்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதன் விளைவாக, தேசிய அளவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுத்த மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதல் இடத்தை எட்டியிருக்கிறது. சமீபத்தில் தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) வெளியிட்ட புள்ளிவிவரங்களில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் 7ம் தேதி முதல் இந்த ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி வரை உள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் உத்தரப் பிரதேசம் சட்டம் ஒழுங்கு பிரச்னையில் தீவிரமாக எதிர்வினையாற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தை குறிப்பிட்டு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காவல்துறைக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். ஐபிசி பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை) உள்ளிட்ட பாலியல் குற்றங்கள் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கை மாநில காவல்துறையினர் சிறப்பாக கையாண்டு அதற்கான தீர்வையும் விரைவில் கண்டுபிடித்துள்ளனர். அதாவது இக்குற்றங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டால் இதில் குற்றச்சாட்டப்பட்ட நபரை உடனடியாக கைது செய்வது, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பது. பாதிக்கப்பட்ட நபருக்கான பாதுகாப்பை உறுதி செய்வது போன்றவற்றை காவல்துறையினர் சிறப்பாக செய்து வருகின்றனர் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications