யாரு சொன்னது.. என்கவுன்ட்டர்கள் உ.பி.யில் அதிகமா? சட்டம் ஒழுங்கில் கறாராக இருக்கோம்: யோகி அறிவிப்பு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சமீபத்தில் இருவர் என்கவுன்ட்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், குண்டர்களை ஒழிக்கதான் என்கவுன்ட்டர் தீவிரமாக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் பிரபல தாதாவாக வலம் வந்த அத்திக் அகமதுவின் மகன் ஆசாத் அகமது அம்மாநில காவல்துறையால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். அதாவது அத்திக் அகமது உ.பியின் பிரபலமான ரவுடியாவார். இவர் 4 முறை எம்எல்ஏவாக இருந்திருக்கிறார். ஒரு முறை எம்பியாகவும் இருந்திருக்கிறார். இப்படி பதவி வகித்த காலத்தில்தான் அத்திக்கின் செல்வாக்கு வளர்ந்திருக்கிறது. எல்லாவிதமான சட்டவிரோத செயல்களையும் அத்திக் செய்து வந்திருக்கிறார். இதனால் இவருக்கு கோடி கணக்கில் சொத்து சேர்ந்திருக்கிறது.

அதேபோல மறுபுறம் வழக்குகளும் சேர்ந்திருக்கின்றன. அதாவது 101 வழக்குகள் அத்திக் மீது பதியப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இவரையும் இவருடைய சகோதரரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவருடைய மகன்தான் ஆசாத் அகமது. இவர் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி என ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவரை காவல்துறையினர் நீண்ட நாட்களாக தேடி வந்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இப்படி இருக்கும்போது அவர் ஜான்சி வழியாக உத்தரப் பிரதேசத்தைவிட்டு தப்பி செல்வதற்கு திட்டமிட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் 12 பேர் கொண்ட ஸ்பெஷல் போலீஸ் குழுக்கள் இவர்களை கைது செய்ய நியமிக்கப்பட்டனர். எதிர்பார்த்தபடி ஆசாத் ஜான்சியில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஜான்சியில் அவரையும் அவரது குழுவையும் சுற்றி வளைத்த போலீசார் கைது செய்ய முயன்றனர். ஆனால் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்த அவர்கள் காவல்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவரும் அவரது நண்பர் ஒருவர் என இருவர் சம்பவ இடத்தில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த என்கவுன்ட்டர் மூலம் யோகி ஆதித்யநாத் உ.பி முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து செய்யப்பட்ட என்கவுன்ட்டர்களின் எண்ணிக்கை 184ஆக அதிகரித்துள்ளது. இதைத்தான் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு பதிலளித்துள்ள யோகி ஆதித்யநாத், "என்கவுன்ட்டர்கள் குண்டர்களை அடக்கதான் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் கோசி காலன் எனும் ஊருக்கு சென்றிருந்தேன். அது மிகப்பெரிய முஸ்லீம் வாழும் பகுதி.
ஆனால் அங்குதான் மாநிலத்தின் மிகப்பெரிய கேங்ஸ்டர்கள், மாஃபியாக்கள் ஆகியோர் இருந்தனர். அப்போது எனக்குள் தோன்றிய ஒரே கேள்வி, 'அரசு ஏன் இதுபோன்ற குற்றவாளிகளை வளர்த்துவிடுகிறது?' என்பதுதான். கோசி காலன் மிகவும் மோசமாக இருந்தது. சுகாதாரம், குடிநீர் வசதி, கல்வி என எதுவும் அங்கு சரியானதாக இல்லை. இப்படி இருக்கையில் அந்த பகுதியை சேர்ந்த ஒரு பிரபல ரவுடி போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். மீண்டும் நான் அதே ஊருக்கு சென்றிருந்தேன்.

இந்த முறை மக்கள் போலீசாரின் நடவடிக்கைக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். அதேபோல அவர்களுக்கு இருக்கும் சுகாதார பிரச்னைகள் குறித்து கவலைப்படவில்லை. ஏனெனில் இந்த அரசு முதலில் ரவுடிகளை ஒழித்துக்கொண்டிருக்கிறது. எனவே பின் வரும் நாட்களில் இந்த சுகாதார சீர் கேடுகளும் ஒழித்து கட்டப்படும் என்று மக்கள் என் காதுபட பேசிக்கொண்டிருந்தனர். எனவேதான் இந்த அரசு என்கவுன்ட்டர்களை தீவிரப்படுத்தியது" என்று கூறியுள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications