தொழில்துறை வளர்ச்சியை வேகப்படுத்த முயற்சி! உ. பியில் புதிய திட்டத்தை அறிவித்த யோகி ஆதித்யநாத்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தொழில்துறை வளர்ச்சியை முன்னெடுப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக காலி மனைகளை விற்பனை செய்வதற்காக புதிய திட்டத்தை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக தொழில்துறை வளர்ச்சியை முன்னெடுப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக காலி மனைகளை விற்பனை செய்வதற்காக புதிய திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார். யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் (YEIDA) கிரேட்டர் நொய்டாவின் செக்டார்-28ல் உள்ள ஐந்து வகையான மனைகளை விற்பனை செய்யும். குடியிருப்புகளை உருவாக்க விரும்பும் நிறுவனங்கள் இந்த நிலங்களை நியாயமான விலையில் வாங்கலாம்.
அதன்படி பிரீமியம் ரூ.28.17 கோடி முதல் ரூ.176 கோடி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உத்தரப் பிரதேசத்தில் நிலம் ஆக்கிரமிப்பு பிரச்னை ஹெவியா இருந்து வந்தது. பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார். தற்போது இதன் தொடர்ச்சியாக நியாயமான விலையில் மனைகளை விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு மிகுந்த வரவேற்பு இருக்கும் என நம்புவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications