வேகமாக வளர்ச்சியடையும் உ.பி! யோகி ஆதித்யநாத் கொடுத்த உத்தரவு.. பம்பரமாய் சுழலும் அரசு அதிகாரிகள்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் வளர்ச்சி திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கும், ஒப்பந்த நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டிருக்கிறார். இந்த உத்தரவை மீறி திட்டங்கள் தாமதமானால், காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இன்னும் முடிக்கப்படாமல் இருக்கும் நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட யோகி, திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். தவறும் பட்சத்தில் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அதாவது வளர்ச்சி திட்ட கட்டுமான பணிகளை உரிய காலத்தில் முடிக்காத ஒப்பந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இப்படி மூன்று முறை அபராதம் விதிக்கப்பட்ட கட்டுமான நிறுவனங்களின் பெயர் 'ப்ளாக்' லிஸ்டில் சேர்க்கப்படும்.
இந்நிறுவனங்கள் அடுத்த ஒப்பந்தங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படாது. தற்போது மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி எனும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன்படி ஒரே நேரத்தில் 13 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சில மாவட்டங்களில் இந்த கட்டுமான பணிகள் 50 சதவிகிதத்தை கூட தாண்டவில்லை. இது ஏராளமான விமர்சனங்களை எழுப்பி இருக்கிறது. எனவேதான் யோகி ஆதித்யநாத் இந்த உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications