Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீதிமன்றத்துக்கு படையெடுத்த 25 பேர்-வன்னியருக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்து!பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

மதுரை: இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் 25 பேர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில்தான் வன்னியருக்கான் 10.5% உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.

1989-ம் ஆண்டு முன்னர் வரை தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வன்னியர் சமூகம் இருந்தது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு மொத்தம் 50% இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் வன்னியருக்கு 20% இடஒதுக்கீடு கோரி முதல் கட்ட போராட்டத்தை வன்னியர் சங்கம் 1987-ல் நடத்தியது. வடதமிழகத்தில் பற்றி எரிந்த போராட்டத்தின் போது போலீசாரின் அடக்குமுறை, துப்பாக்கி சூடுகளுக்கு மொத்தம் 21 பேர் பலியாகினர். தமிழகத்தில் 1965-ம் ஆண்டு இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக நடந்த போராட்டத்துக்குப் பிந்தைய மிகப் பெரிய கிளர்ச்சி இது.

1989-ல் 20% இடஒதுக்கீடு

1989-ல் 20% இடஒதுக்கீடு

பின்னர் 1989-ல் திமுக ஆட்சி அமைந்த போது முதல்வராக இருந்த கருணாநிதி, வன்னியர்கள் உட்பட பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்த 108 சமூகத்தினரை பிரித்து மிகப் பிற்படுத்தப்பட்டோர் என்ற புதிய பிரிவை உருவாக்கினார். மேலும் பிற்படுத்தப்பட்டோருக்கான 50% இடஒதுக்கீட்டில் இருந்து மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

உள் இடஒதுக்கீடு கோரிக்கை

உள் இடஒதுக்கீடு கோரிக்கை

இதன்பின்னர் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இடஒதுக்கீட்டில் வன்னியருக்கு மட்டும் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. கடந்த அதிமுக ஆட்சியில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்த போராட்டங்களை அடுத்து மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இடஒதுக்கீட்டில் வன்னியருக்கு மட்டும் 10.5% உள்இடஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மேலும் மிக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள சீர்மரபினருக்கு 7% இடஒதுக்கீடும் எஞ்சிய மிக பிற்படுத்தப்பட்டோருக்கு அதாவது 22 ஜாதியினருக்கு 2.5% இடஒதுக்கீடும் வழங்கப்பட்டது.

Recommended Video

    வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்து!
    25 பேர் வழக்கு

    25 பேர் வழக்கு

    வன்னியர்களுக்கு மட்டுமே 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றிருந்த ஏராளமான சமூகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 68 சாதிகளை உள்ளடக்கிய சீர்மரபினருக்கு 7% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்ட போதும் கூட அதை அந்த சமூகத்தினர் ஏற்க மறுத்தனர். தமிழக அரசின் இந்த அரசாணைக்கு எதிராக அப்போதே அடுத்தடுத்து வழக்குகள் தொடரப்பட்டன. சாமிநாதன் உள்ளிட்ட மொத்தம் 25 பேர் முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில்தான் இந்த வழக்கை தொடர்ந்தனர். பின்னர் இந்த வழக்குகள் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு சிறப்பு வழக்காக மாற்றப்பட்டது. மதுரை உயர்நீதிமன்ற கிளையின் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை நாள்தோறும் விசாரித்தது.

    வன்னியர் உள் இடஒதுக்கீடு ரத்து

    வன்னியர் உள் இடஒதுக்கீடு ரத்து

    இவ்வழக்கில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இடையீட்டு மனுதாரராகவும் இணைந்து கொண்டார். இந்த வழக்குகளின் விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் 25 மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்று வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை இன்று அதிரடியாக ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். மேலும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாமல் எப்படி குறிப்பிட்ட ஜாதியினருக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கியிருக்கும் இன்றைய தீர்ப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+