இடைவிடாமல் 51 தண்டால் எடுத்த ஆர்என் ரவி.. 73 வயதிலும் வியக்க வைத்த ஆளுநர்.. மதுரையில் அசத்தல்
மதுரை: 11வது சர்வதேச யோகா தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்என் ரவி இன்று மதுரையில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது 10,000 மாணவர்களுடன் சேர்ந்து யோகா செய்த ஆளுநர் ஆர்என் ரவி தனது 73 வயதிலும் இடைவிடாமல் 51 தண்டால் எடுத்து அனைவரையும் வியக்க வைத்தார்.
இன்று சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது 11வது சர்வதேச யோகா தினமாகும். நம் நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் யோகா தினத்தை கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாடு உள்பட நம் நாட்டின் பல்வேறு இடங்களில் இன்று மாணவ-மாணவிகள் யோகா செய்தனர்.

மதுரையில் வேலம்மாள் குளோபல் பள்ளி ஏற்பாடு செய்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்என் ரவி இன்று பங்கேற்றார். 10,000 மாணவர்களுக்கு மத்தியில் ஆளுநர் ஆர்என் ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று யோகா செய்தார்.
வழக்கமாக ஆளுநர் ஆர்என் ரவி கோட்சூட் அணிந்திருப்பார். இன்றைய யோகா நிகழ்ச்சியில் அவர் டிராக்சூட், வெள்ளை நிற டீசர்ட் அணிந்து பங்கேற்றார். யோகா செய்த பிறகு ஆளுநர் ஆர்என் ரவி மாணவர்கள் மத்தியில் இடைவிடாமல் தண்டால் (Push-Ups) எடுத்தார். இடைவிடாமல் 51 தண்டால்களை எடுத்து ஆளுநர் ஆர்என் ரவி அசத்தினார். இதனை பார்த்த மாணவர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். மேலும் மாணவ-மாணவிகளுக்கு யோகாவின் பயன் குறித்து விளக்கி பேசினார்.
ஆளுநர் ஆர்என் ரவி தண்டால் எடுத்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. ஆளுநர் ஆர்என் ரவிக்கு தற்போது 73 வயது ஆகிறது. அவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்த ஆர்என் ரவி இயற்பியல் பாடப்பிரிவில் முதுகலை படிப்பை முடித்தார். அதன்பிறகு பத்திரிகை துறையில் பணியாற்றினார்.
1976ம் ஆண்டில் ஐபிஎஸ் அதிகாரியானார். கேரளா கேடரில் அவருக்கு பணி வழங்கப்பட்டது. அங்கு 10 ஆண்டுகள் வரை பணியாற்றினார். அதன்பிறகு மத்திய அரசு பணிக்கு சென்றார். சிபிஐயில் பணியாற்றினார். சுரங்க மாஃபியாக்கள் உட்பட Organised criminals பிரிவில் தலைமை தாங்கினார்.
ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மாவோயிஸ்ட்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் பணியாற்றினார். 2012ல் ஓய்வு பெற்றார். அதன்பிறகு 2014ல் ஜாயிண்ட் உளவுத்துறை கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார். பிறகு 2018 ம் ஆண்டில் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு நாகலாந்து, மேகாலயா ஆளுநராக செயல்பட்டார். இப்போது தமிழக ஆளுநராக நீடித்து வருகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications