Tamilnadu என எழுதுவதை THAMIZHL NAADU என ஆங்கிலத்தில் மாற்றி எழுத கோரி ஹைகோர்ட் கிளையில் வழக்கு!
மதுரை: தமிழ்நாடு என்பதை ஆங்கிலத்தில் Tamilnadu என எழுதுவதற்கு பதில் THAMIZHL NAADU என எழுத உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இம்மனுவை 8 வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை.
தூத்துக்குடி கடம்பூரை சேர்ந்த செல்வகுமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், தமிழ் மொழியின் சிறப்பு ழ கரம்தான். ஆனால் ஆங்கிலத்தில் Tamilnadu என்றே எழுதுகிறோம்.

ஆகையால் சிறப்பு ழ கரத்தின் தனித்தன்மையை பாதுகாக்கும் வகையில் இனி ஆங்கிலத்தில் THAMIZHL NAADU என எழுத உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இம்மனுவை எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி பெஞ்ச் விசாரித்தது.
இந்த விசாரணையின் போது வட இந்தியர்களுக்கு சிறப்பு ழகர உச்சரிப்பு வராது என சுட்டிக்காட்டினர். ஆனால் மனுதாரர் தரப்பில், தமிழக அரசின் தற்போதைய வெற்றிநடை போடும் தமிழகம் விளம்பரங்களில் THAMIZHL NAADU என்றே எழுதப்படுகிறது.
பிற மாநிலத்தவருக்காக நமது தமிழின் ழகர சிறப்பை இழக்க முடியாது என வாதிடப்பட்டது. இதனையடுத்து இம்மனுவை பரிசீலித்து 8 வாரங்களுக்குள் முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர் நீதிபதிகள்.
-
நீதிபதிகள் புனித பசுக்கள் இல்லை.. நீதித்துறையில் ஊழல் இல்லைனு சொல்ல முடியாது – சென்னை ஹைகோர்ட் -
இஸ்லாமிய மன்னர்களே பசுக்களை வெட்டியது இல்லை.. தீர்ப்பில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் சொன்னது என்ன? -
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
நாளை பக்ரீத்.. தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை.. ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில்












Click it and Unblock the Notifications