Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கணவரை இழந்தவர் செங்கோல் வாங்கக்கூடாதா? பிடிஆர் தாய்க்கு எதிரான மனு தள்ளுபடி.. ஹைகோர்ட் அதிரடி

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழாவின் 8 நாள் சிகர நிகழ்ச்சியில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தாய் ருக்மணி கணவரை இழந்தவர் என்பதால் அவரிடம் செங்கோல் வழங்கக்கூடாது என தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் கணவரை இழந்தவர் செங்கோல் வாங்கக்கூடாது என ஆகம விதியில் எங்கு உள்ளது? கோவிலுக்குள் இந்துக்கள் அனைவரும் தானே செல்கிறார்கள்? செங்கோல் வாங்குபவரும் இந்து தானே? என உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது.


உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.

A scepter should not be given to a person who has lost her husband Madurai High Court dismissed petition agains PTR Mother

விழாவின் 8 வது நாள் சிகர நிகழ்ச்சியான மதுரை மீனாட்சியம்மன் பட்டாபிேஷகத்தில் செங்கோல் வழங்கும் நிகழ்ச்சி நடக்கும். இந்நிலையில் தான் கணவரை இழந்தவரிடம் செங்கோல் வழங்கக்கூடாது எனக்கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை தினகரன் என்பவர் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‛‛மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா என்பது பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஆகம விதிகள் படி தான் நடக்கிறது. விழாவின் 8 வது நாள் மீனாட்சியம்மன் பட்டாபிஷேக நிகழ்ச்சியில் அம்மன் கையில் இருந்து செங்கோல் கோவில் அறங்காவலர் குழு தலைவரிடம் வழங்கப்படும். ஆகம விதிகளின் படி திருமணம் ஆகாதவர், கணவரை இறந்தவர் செங்கோலை பெற்று கொள்ள முடியாது.


தற்போது மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தாய் ருக்மணி உள்ளார். இவர் கணவரை இழந்தவர். இதனால் செங்கோலை அவருக்கு பதிலாக உரியவரிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்’’ என மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனு என்பது மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சரவணன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆகம விதிகளின்படி செங்கோல் வழங்க வேண்டும். தற்போதைய அறங்காவலர் குழு தலைவர் ருக்மணியிடம் செங்கோல் வழங்கக்கூடாது என மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் வழக்கறிஞர் வீரா கதிரவன், ‛‛இதுபோன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கை 2 முறை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என வாதிட்டார்.


இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி சரவணன், ‛‛கணவரை இழந்தவர் செங்கோல் வாங்கக்கூடாது என்று ஆகம விதிகளில் எங்கு உள்ளது? ஆகம விதியில் எந்த இடத்தில் இந்த விஷயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவிலுக்குள் இந்துக்கள் அனைவரும் தானே செல்கிறார்கள்? செங்கோல் வாங்குபவரும் இந்து தானே? என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.


மேலும் விழா தொடங்கிய பிறகு இறுதிக்கட்டத்தில் இதுபோன்ற மனுவை தாக்கல் செய்வது ஏற்புடையது அல்ல. மேலும் இந்த காலத்திலும் இதுபோன்ற காரணத்தை முன்வைப்பது ஏற்கத்தக்கதல்ல’’ எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+