11 மாத சிறைவாசம்.. கடைசி நேரத்தில் கையெழுத்திட்ட உறவினர்.. ஜாமீனில் விடுதலையானார் நிர்மலா தேவி!
கடந்த வாரம் ஜாமீன் பெற்ற நிர்மலா தேவி இன்று மதுரை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
Recommended Video

மதுரை: கடந்த வாரம் ஜாமீன் பெற்ற நிர்மலா தேவி இன்று மதுரை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். 11 மாதங்களுக்கு பிறகு இவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களுக்கு முன் வாட்ஸ் ஆப்பில் நிர்மலா தேவி ஆடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத் துறை பேராசிரியராக இருந்தவர் நிர்மலா தேவி.
இவர் தனது கல்லூரி மாணவிகளை மதுரை காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ள அழைத்துள்ளார். இது குறித்து ஆடியோ ஆதாரத்தின் அடிப்படையிலும் மாணவிகளின் புகாரின் பேரிலும் அருப்புக் கோட்டை போலீஸார் கைது செய்தனர்.

சிபிசிஐடி விசாரணை
இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். வழக்கை சிபிசிஐடி போலீஸார் பல மாதத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்தார்
11 மாதமாக இவர் அந்த சிறையில் இருந்தார். இவருக்கு இடையில் பல முறை ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் தொடக்கத்தில் அரசு இவரின் ஜாமீன் மனுக்களை எதிர்த்தது. கடந்த வாரத்தின் போது அரசு இவரின் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

ஜாமீன் வழங்கியது
v இந்த நிலையில் கடந்த வாரம் நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. முதலில் இவருக்கு உறவினர்கள் யாரும் ஜாமீன் கையெழுத்து போட முன்வரவில்லை. கடைசியில் நிர்மலா தேவியின் மூத்த அண்ணன் ரவி மற்றும் குடும்ப நண்பர் ஒருவரும் ஜாமீன் கொடுத்து கையெழுத்திட்டனர். இதனால் நீதிமன்றம் இவருக்கு ஜாமீன் வழங்குவதாக அறிவித்தது.

ஜாமீனில் விடுதலை
இதையடுத்து இன்று சிறையிலிருந்து நிர்மலா தேவி ஜாமீனில் விடுதலை ஆனார். 11 மாதங்களாக சிறையில் இருந்தார் நிர்மலா தேவி. விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும், ஊடகங்களுக்கு பேட்டியளிக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் இவர் விடுதலையாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications