உசிலம்பட்டியில் சூப்பர் .. வலை வீசி வெட்டுக்கிளியைப் பிடிக்கும் வேளாண் அதிகாரிகள்.. செம கலகல!
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே வேளாண்மை துறையினர் வெட்டுக்கிளியை வலைபோட்டு பிடிக்கும் சம்பவம் காமெடி சம்பவமாக மாறியுள்ளது.
Recommended Video
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே புத்தூர் கிராமத்தில் சரவணன் என்பவரின் தோட்டத்தில் கால்நடை தீவனப் புல்லில் வெட்டுக்கிளி படையெடுத்தது. அதனைதொடர்ந்து அருகில் பயிரிட்டிருந்த சோளப்பயிரில் தாவிய வெட்டுகிளிகள் சுமார் அரை ஏக்கர் (50சென்ட்) பயிர்களை சேதப்படுத்தியது.
இந்நிலையில் அமைச்சர் உதயகுமார், தலைமையில் வேளாண்மை துறை அதிகாரிகள் வெட்டுக்கிளி குறித்து ஆய்வு மேற்கொண்டு, இது லோகஸ்ட் ரக வெளிநாட்டு வெட்டுக்கிளி அல்ல எனவும், இந்த வெட்டுக்கிளி விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

வேளாண்துறை
இந்நிலையில் உசிலம்பட்டி வேளாண்மைதுறை அதிகாரி புவனேந்திரன் தலைமையிலான குழுவினர் கொசுவலையை எடுத்து சென்று, பயிரில் சுற்றி திரிந்த வெட்டுக்கிளிகளை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் வெட்டுக்கிளி யாருடைய விரட்டுக்கும் பயப்படாமல் இடம்மாறி சென்று கொண்டே இருந்தது.

கொசு வலை
ஆ ஊ என சத்தம் போட்டுக் கொண்டே (அப்போதுதான் வெட்டுக்கிளி மாட்டுமாம்) சுமார் 5மணி நேரம் போராடி வெட்டுகிளிகளை கொசுவலைக்குள் பிடிக்க முடியாமல் திணறினர். கடைசியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட வெட்டுக்கிளிகளை பிடித்து போரில் வெற்றி பெற்ற மாவீரனைப் போல் பெருமிதத்துடன் சென்றனர்.

தெர்மாகோல்
வெட்டுக்கிளிகள் அதிகம் தென்பட்டால் இதே போல் கொசுவலையைப் போட்டு பிடிக்க வேண்டுமென சம்மந்தப்பட்ட விவசாயிக்கு அறிவுரையும் கூறிச் சென்றனர். இந்த சம்பவத்தை பார்த்த கிராம மக்கள் ஆண்டிபட்டி வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க தெர்மாகோல் ஷீட்டை தண்ணீரில் மிதக்க விட்ட சம்பவத்துடன் ஒப்பிட்டு சிரித்துக் கொண்டனர்.

விவசாய பயிர்கள்
ஆப்பிரிக்காவிலிருந்து பாகிஸ்தானுக்கு வரும் வெட்டிக்கிளிள் அங்கு பயிர்களை சேதப்படுத்திய பிறகு நேராக இந்தியாவுக்குள் நுழைகின்றன. இங்கு ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்துகின்றன. இந்த ரக வெட்டுக்கிளிகள் லோகஸ்ட் என அழைக்கப்படுகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications