முத்துராமலிங்கத் தேவரின் மறு உருவம் அண்ணாமலையா.. செல்லூர் ராஜு பேச்சால் கொந்தளித்த மாணிக்கம் தாகூர்!
மதுரை: முத்துராமலிங்கத் தேவரை அவமானப்படுத்திய செல்லூர் ராஜுவிற்கு மதுரை மேற்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கொந்தளித்துள்ளார். முத்துராமலிங்கத் தேவரின் மறு உருவம் தான் அண்ணாமலை என்று செல்லூர் ராஜு பேசியது சர்ச்சையாகி இருக்கும் நிலையில், செல்லூர் ராஜுவின் நகைச்சுவை உணர்வுக்கு அளவே இல்லாமல் போயிருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், மதுரையில் தேர்தல் களம் உச்சத்தில் இருக்கிறது. இந்த முறை மதுரை அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் தோற்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் திமுகவினருக்கு அறிவுறுத்தி இருக்கிறார். அதிலும் மதுரை மேற்கு தொகுதியை கட்டாயம் கைப்பற்ற அமைச்சர் மூர்த்திக்கு உத்தரவிட்டுள்ளார்.

மதுரை தெற்கு தொகுதி
அதற்கேற்ப மதுரை மேற்கு தொகுதி பொறுப்பு அமைச்சர் மூர்த்தி வசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப அமைச்சர் மூர்த்தியின் ஆதரவாளரான எஸ்.எஸ்.ரகு பாலாஜிக்கு திமுக தரப்பில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரை மேற்கில் செல்லூர் ராஜு வெல்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் தவெக மாவட்டச் செயலாளரான தங்கப்பாண்டியும் கணிசமான வாக்குகளை பெறுவார் என்று தெரிகிறது.
முக்குலத்தோர் சமூக வாக்குகள்
இதனால் செல்லூர் ராஜு கொஞ்சம் கலங்கி போயிருக்கிறார். இதனால் மதுரை மேற்கில் கணிசமாக இருக்கும் முக்குலத்தோர் சமூக வாக்குகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் செல்லூர் ராஜு தீவிரமாக உள்ளார். இந்த நிலையில் மதுரை மேற்கு தொகுதியில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் சேர்ந்து செல்லூர் ராஜு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
செல்லூர் ராஜுவின் சர்ச்சை பேச்சு
அப்போது செல்லூர் ராஜு பேசுகையில், கர்நாடகாவில் ஐபிஎல் அதிகாரியாக இருந்த போது சிங்கமாக, எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் அண்ணாமலை. முத்துராமலிங்கத் தேவரின் மறு உருவம் அண்ணாமலை என்று தெரிவித்தார். செல்லூர் ராஜுவின் பேச்சு அங்கிருந்த அதிமுக ஆதரவு முக்குலத்தோர் சமூக பிரதிநிதிகள் மத்தியில் கூட அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதிர்ச்சியில் அதிமுகவினர்
மதுரையில் அண்ணாமலைக்கு என்று பெரிய செல்வாக்கு கூட இல்லாத போது, பாஜகவைச் சேர்ந்த ஒருவரை செல்லூர் ராஜு முத்துராமலிங்கத் தேவருடன் ஒப்பிட்டது அச்சமூக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கொந்தளித்துள்ளார். மாணிக்கம் தாகூரும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர் தான்.
மாணிக்கம் தாகூர் பதிலடி
செல்லூர் ராஜுவின் பேச்சு தொடர்பாக மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில், அண்ணன் செல்லூர் ராஜுவின் நகைச்சுவை உணர்வு அளவே இல்லாமல் போனது. தேவர் அய்யா அவமதிக்கும் உங்க வார்த்தைக்கு மதுரை மேற்கு தொகுதி மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார். மாணிக்கம் தாகூரின் பதிவு அச்சமூக மக்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
மதுரை மெட்ரோ ரயிலுக்கு மறுப்பு ஏன்? திருப்பரங்குன்றம் முருகன் முன்.. ஆதாரத்துடன் அண்ணாமலை ஓபன் டாக் -
அண்ணாமலை முகத்தில் விழுந்த செல்போன்.. பூக்களோடு வீசப்பட்டதும் அவர் கொடுத்த ரியாக்ஷன் -
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
“குடிநீர் இன்றி கிராமமே காலி செய்ததா?”- அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு கருணாஸ் கொடுத்த பதிலடி! -
கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்.. திமுக யாரிடம் செல்லும் என்றே தெரியாது.. அண்ணாமலை பரபர பேச்சு -
4,379 ஓட்டு ஷாக்! விஜய பிரபாகரன் அப்போ அப்படி பேசிட்டு.. விருதுநகரில் நடந்த அந்த ரகசிய சமரசம் என்ன












Click it and Unblock the Notifications