அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார் மீது தாக்குதல் முயற்சி? உடன் வந்தவர்கள் காயம்! மதுரையில் என்ன நடந்தது

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை உசிலம்பட்டி அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமாருடன் சென்றவர்கள் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். டிடிவி தினகரனின் அமமுகவினர் தான் இந்த தாக்குதலை நடத்தியதாக ஆர்பி உதயகுமார் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நேற்று அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்று இருந்தனர். பின்பு கூட்டம் முடிந்த பின்பு திரும்பியுள்ளனர். ஆர்பி உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திருமங்கலம் வழியாக கார்களில் சென்றுகொண்டிருந்தனர்.

madurai rb udayakumar aiadmk

அப்போது உசிலம்பட்டி அருகே திடீரென சிலர் வாகனங்களை வழிமறித்துள்ளனர். பின்னர் கார்கள் மற்றும் அதில் இருந்துவர்கள் அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் 4 கார்கள் சேதமடைந்தன. மேலும் 3 பேர் காயமடைந்தனர். இதையடுத்து உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு சென்றனர்.

வழிமறித்து நடத்திய தாக்குதலில் மதுரை இளைஞர் பாசறை இணை செயலாளர் தினேஷ்குமார், அபினேஷ், விஷ்ணு உள்ளிட்ட 3 படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில், டிடிவி தினகரனின் அமமுகவினர் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக ஆர்பி உதயகுமார் தரப்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

டிடிவி தினகரனை ஆர் பி உதயகுமார் தவறாக பேசியதாகவும், இதன் காரணமாகவே அவரது ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. புகார் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைய தொடங்கியுள்ளனர். மதுரையில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+