தமிழகத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை வழக்குகள் 40 சதவீதம் அதிகரிப்பு.. எவிடென்ஸ் கதிர் திடுக்
மதுரை: தமிழகத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை வழக்குகள் 40 சதவீதம் அதிகரித்து உள்ளது, 7,500 எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளது என மதுரையில் எவிடென்ஸ் கதிர் பேட்டியில் கூறினார். பாதிக்கப்பட்ட பெண்களில் 3 சதவீதம் பேருக்கு மட்டுமே நீதி கிடைக்கிறது. வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களை விமர்சனம் செய்கிறார்கள். விமர்சனம் செய்வோர்களை வழக்குகளில் சேர்த்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மதுரையில் உள்ள எவிடென்ஸ் அமைப்பின் சார்பில் கடந்த 6 ஆண்டுகளில் தமிழகத்தில் தலித் பெண்கள் மற்றும் பழங்குடியின பெண்கள் மீது நடைபெற்ற சாதி ரீதியான வன்கொடுமை, சாதிய படுகொலை, பாலியல் சித்திரவதை மற்றும் கூட்டு பாலியல் வன்புணர்ச்சி சம்பவங்கள் உள்ளிட்ட 90 வழக்குகளை ஆய்வு செய்து ஆய்வறிக்கை முடிவினை எவிடன்ஸ் செயல் இயக்குனர் கதிர் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குனர் கதிர் கூறுகையில், "90 வழக்குகளில் 3 வழக்குகளில் மட்டுமே நீதிமன்ற தீர்ப்பு கூறப்பட்டுள்ளது, பல வழக்குகள் நீதிமன்றம் விசாரணைக்கு வரவில்லை, புகார்கள் கொடுத்து விட்டு பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக காத்திருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட பெண்கள் அரசு இயந்திரத்தின் மீது அதிருப்தியில் உள்ளனர், காவல்துறை காலதாமதம் செய்வதால் வழக்குகளில் கட்டப்பஞ்சாய்த்து செய்யப்படுகிறது, பாதிக்கப்பட்ட மக்களிடம் பணம் வாங்கி தருகிறோம், வழக்கை வாபஸ் பெறுங்கள் என காவல்துறை விசாரணை அதிகாரிகள் கூறுகிறார்கள்.
பாதிக்கப்பட்ட பெண்களில் 3 சதவீதம் பேருக்கு மட்டுமே நீதி கிடைக்கிறது. வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களை விமர்சனம் செய்கிறார்கள். விமர்சனம் செய்வோர்களை வழக்குகளில் சேர்த்து கைது செய்ய வேண்டும். வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளம் வெளியே வருகிறது.
எஸ்.சி/எஸ்.டி ஆணைய கூட்டத்தை நடத்த வேண்டும், தமிழகத்தில் 7,500 எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளது, வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு வழங்குவதில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 இலட்சம் நிதியுதவி, அரசு வேலை வழங்க வேண்டும், நீதிமன்றங்களில் வன்கொடுமை வழக்குகள் தேங்கி நிற்கிறது, தமிழகத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை வழக்குகள் 40 சதவீதம் அதிகரித்து உள்ளது.
ஒரு வழக்கில் குற்றவாளி ஜாமீன் கிடைப்பதற்க்காக பாதிக்கப்பட்ட சிறுமியின் வயதை 13 வயதுக்கு பதில் 14 என பதிவு செய்யப்பட்டுள்ளது, இதற்க்காக காவல்துறை குற்றவாளியிடம் பணம் பெறப்பட்டுள்ளது, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிக்கு முன் பாதுகாப்பு கொடுக்க வேண்டும், மாவட்ட எஸ்.சி/எஸ்.டி கமிட்டி வலுவிழந்து உள்ளது, மாவட்ட எஸ்.சி/எஸ்.டி கமிட்டியின் தலைவராக உள்ள மாவட்ட ஆட்சியரே கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பதில்லை, ஆய்வறிக்கை முடிவுகளை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க உள்ளோம்" இவ்வாறு கூறினார்.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications