ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்தவர்கள் பழனிச்சாமி - பன்னீர்செல்வம்... டிடிவி.தினகரன் பேச்சு
Recommended Video
திருப்பரங்குன்றம்: ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்தவர்கள் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து டிடிவி தினகரன் அனுப்பானடியில் இருந்து பெருங்குடி வரையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், நீட்தேர்வுக்கு அனுமதி, விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களுக்கு எதிரான அனுமதி என தமிழக மக்களுக்கு எதிராக மத்திய,மாநில அரசுகள் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
முன்னதாக, உள்ளாட்சித் தேர்தலில் 60 க்கு 40 என்கிற விகிதத்தில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் தாம் கூட்டணி உள்ளது. தேர்தலுக்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்து விடுவார் என்றும் ஆரூடம் தெரிவித்தார்.
திமுக மீதும், ஸ்டாலின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இல்லை... தமிழிசை சொல்கிறார்
மேலும், அதிமுகவுக்கு தொண்டர்கள் பலம் இல்லை, பண பலம் மட்டுமே உள்ளது. 22 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம். நாங்கள் வெற்றி பெற்றால் திமுகவுக்கு ஆதரவு எப்படி கொடுக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.