பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட தடை.. உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
மதுரை: பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தடை விதித்துள்ளது.
Recommended Video
நாடு முழுவதும் வரும் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. பொதுவாக பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்துவர். பின்னர் குறிப்பிட்ட நாள்கள் கழித்து பிள்ளையார்களின் விஜர்சன ஊர்வலம் நடத்தப்படும்.
இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக மக்கள் கூட்டத்தை தவிர்க்க பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து விழா கொண்டாடக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு பிறப்பித்த தடை உத்தரவும் செல்லும். கொரோனா தடுப்பு நடவடிக்கையே தமிழக அரசின் உத்தரவிற்கு காரணம். தமிழக அரசின் உத்தரவை தடை செய்ய முடியாது. சிலையை வைக்க ஏன் இவ்வளவு அவசரப்படுகிறீர்கள்?. இது தமிழக அரசின் கொள்கை முடிவு. எனவே இதற்கு தடை செய்ய முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது.
கங்கிராஜுலேஷன்ஸ்.. எச். ராஜா தாத்தா ஆயிட்டார்.. "முருகன்" பெயரை வைக்க சொல்லி நெட்டிசன்கள் அனத்தல்!
தூத்துக்குடியை சேர்ந்த ராமசாமி என்பவர் தாக்கல் செய்த மனுக்களை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.