பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட தடை.. உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

Subscribe to Oneindia Tamil

மதுரை: பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தடை விதித்துள்ளது.

Recommended Video

    விநாய சதுர்த்தியை வீட்டிலேயே கொண்டாடுங்கள்..ஊர்வலம் வேண்டாம் - தமிழக அரசு

    நாடு முழுவதும் வரும் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. பொதுவாக பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்துவர். பின்னர் குறிப்பிட்ட நாள்கள் கழித்து பிள்ளையார்களின் விஜர்சன ஊர்வலம் நடத்தப்படும்.

    Chennai HC bans to install Vinayagar statues in public places.

    இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக மக்கள் கூட்டத்தை தவிர்க்க பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து விழா கொண்டாடக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அப்போது விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு பிறப்பித்த தடை உத்தரவும் செல்லும். கொரோனா தடுப்பு நடவடிக்கையே தமிழக அரசின் உத்தரவிற்கு காரணம். தமிழக அரசின் உத்தரவை தடை செய்ய முடியாது. சிலையை வைக்க ஏன் இவ்வளவு அவசரப்படுகிறீர்கள்?. இது தமிழக அரசின் கொள்கை முடிவு. எனவே இதற்கு தடை செய்ய முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது.

    தூத்துக்குடியை சேர்ந்த ராமசாமி என்பவர் தாக்கல் செய்த மனுக்களை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+