லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போடுங்கள்.. உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் ஆவேசம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போடுங்கள் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஆவேசமாக தெரிவித்தனர்.
மின் வாரிய உதவி பொறியாளர் பணி நியமனம் தொடர்பாக மதுரை கிளை நீதிமன்றத்தில் பழனிபாரதி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அதை விசாரித்த நீதிபதிகள் லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும். லஞ்சம் வாங்குவோரின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்.
மின்வாரிய உதவி பொறியாளர் பணி நியமன விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும். லஞ்சம் வாங்குவோர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
லஞ்சம் வாங்கும் பழக்கம் முழுமையாக ஒழிய வேண்டும் என்றால் கடும் தண்டனை வழங்கினால்தான் குறையும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications