துணை மேயர் பற்றி மேயரிடம் புகார்! குறை தீர்க்கும் முகாமில் நடந்த டிவிஸ்ட்! மதுரை மாநகராட்சி கூத்து!
மதுரை: மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் துணை மேயர் மீது மேயரிடம் ஒருவர் புகார் கூறியது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை துணை மேயர் நாகராஜன் மீது புகார் கூறி முத்துவேல் என்பவர் கொடுத்த கடிதத்தை வாங்கிப் பார்த்த மதுரை மேயர் இந்திராணி, அதன் மீது என்ன நடவடிக்கை எடுப்பது எனத் தெரியாமல் திகைத்துப் போனார்.
ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள மதுரை மாநகராட்சி நிர்வாகம் துணை மேயர் மீதான புகாரால் இப்போது மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது.

மதுரை மாநகராட்சி
மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட 97-வது வார்டை சேர்ந்த முத்துவேல் என்பவர் துணை மேயர் நாகராஜன் மீது பரபரப்பு புகார் தெரிவித்தார். நிலவரையறை விவகாரத்தில் தன்னை துணை மேயர் நாகராஜன் மிரட்டுவதாக மேயர் இந்திராணியிடம் முறையிட்டார். தன் மீதான புகாரை மேயரிடம் முத்துவேல் தெரிவித்த போது துணை மேயர் நாகராஜனும் அருகில் அமர்ந்து இருந்தது தான் இதில் சிறப்பு.

விவாதம் வேண்டாம்
இதனிடையே மேயரிடமும், அதிகாரிகளிடமும் துணை மேயர் நாகராஜன் ஏதோ கூற, பதிலுக்கு முத்துவேல் என்பவரும் அவரை நோக்கி ஏதோ கூறினார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இதனிடையே ''அண்ணே சும்மா விவாதம் பண்ணாதீங்க'' எனக் கூறி தனது தரப்பு நியாயத்தை மேயரிடம் மீண்டும் விளக்கிக் கூறினார் முத்துவேல். அப்போது துணை மேயர் இடைமறிக்க முயன்ற போது, மதுரை மாநகராட்சி ஆணையர் அவரை அமைதிப்படுத்தினார்.

விசாரிங்க மேடம்
நமக்கேன் வம்பு என்கிற வகையில் அங்கிருந்த அதிகாரியை அழைத்த மதுரை மேயர் இந்திராணி, முத்துவேல் கேட்கும் கோரிக்கை நியாயமானதா அதை செய்து கொடுக்க சாத்தியம் உள்ளதா என ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி அனுப்பினார். அப்போதும் துணை மேயர் ஏதோ கூற, பதிலுக்கு முத்துவேல் ''உங்களுக்கு ஏண்ணே கோபம் வருது'' எனக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

முக்கிய மாநகராட்சி
தமிழகத்தின் முக்கிய மாநகராட்சிகளில் ஒன்றாக திகழக்கூடிய மதுரையில் துணை மேயர் மீதே மேயரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ள நிகழ்வு ஆட்சி மேலிடத்தின் கவனத்திற்கும் சென்றிருக்கும் எனத் தெரிகிறது. ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள மதுரை மாநகராட்சி நிர்வாகம் துணை மேயர் மீதான புகாரால் இப்போது மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications