ஜல்லிக்கட்டு நடத்தி முடித்த கையோடு.. அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா! வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை
மதுரை: வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து மதுரையில் உள்ள அவரது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு அவர் சிகிச்சை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று லேசான நிலையிலேயே கண்டறியப்பட்டுள்ளதால் விரைவில் அவர் நலம்பெறுவார் என நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.

வணிகவரித்துறை
வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று காலை கண்டறியப்பட்டுள்ளது. நேற்று முதல் லேசான உடல்வலி மற்றும் காய்ச்சலுடன் இருந்த அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டிருக்கிறது. அதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மதுரை அய்யர்பங்களா பகுதியில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார் அமைச்சர் மூர்த்தி.

முதல்வர் விழா
இதனிடையே மதுரை மாவட்ட வளர்ச்சித் திட்டப்பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைக்கும் நிகழ்வு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. அதில் அமைச்சர் மூர்த்தி கொரோனா பெருந்தொற்று காரணமாக பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் மூர்த்தியுடன் கடந்த 2 நாட்களாக தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா சோதனை செய்துகொள்ள முன் வந்திருப்பது கவனிக்கத்தக்கது.

ஜல்லிக்கட்டு விழா
பொங்கலையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்களில் முழுமையாக பங்கேற்ற அமைச்சர் மூர்த்தி, வீரர்களுக்கு தங்கக்காசுகளை பரிசாக அள்ளிக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது. கொரோனாவுக்கு அஞ்சாமல் ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தது முதல் அது மாலை நிறைவடையும் வரை அமைச்சர் மூர்த்தி அனைவருடனும் மேடையிலேயே இருந்தது கவனிக்கத்தக்கது.

4-வது அமைச்சர்
இதனிடையே தமிழக அமைச்சர்களில் இதுவரை 4 பேருக்கு கொரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அமைச்சர்கள் மதிவேந்தன், எஸ்.எஸ்.சிவசங்கர், வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகியோர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு நலம் பெற்றுள்ள நிலையில், 4-வது அமைச்சராக மூர்த்தி கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார். அமைச்சர் மூர்த்தியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் நலம் விசாரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications