திருப்பரங்குன்றம் பகுதியில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிப்பு-ஏற்பாடு செய்த திமுக எம்எல்ஏ
Subscribe to Oneindia Tamil
மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதியில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிப்பதற்கு அத்தொகுதி திமுக எம்.எல்.ஏ. டாக்டர் பா. சரவணன் ஏற்பாடு செய்திருக்கிறார்.
Recommended Video
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா... 144 தடை நீட்டிக்கப்படுமா?
கொரோனா தொற்று நோயை தடுக்கும் நடவடிக்கையில் அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு போதுமான நிதியை ஒதுக்கி வருகின்றனர்.

ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் தொகுதியின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றும் அரசின் லாக்டவுனை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக எம்.எல்.ஏ. டாக்டர் பா. சரவணன், தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.


இன்று முதல் கட்டமாக விரகனூர், சிந்தாமணி பகுதிகளில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.













Click it and Unblock the Notifications