Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பரங்குன்றத்தில் கந்தசஷ்டி விழா எப்போது தொடங்குகிறது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அக்டோபர் 22 ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா தொடங்கவுள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கந்த சஷ்டி திருவிழா தீபாவளி மறுநாள் தொடங்கவில்லை. முக்கியத் திருவிழாவான வேல் வாங்குதல் நிகழ்ச்சி அக்டோபர் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அறுபடை வீடுகளில் ஒன்று திருப்பரங்குன்றம். இக்கோவிலுக்கு பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்கள், வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வந்து முருகனை ஏராளமானோர் வழிபட்டுச் செல்கின்றனர். திருப்பரங்குன்றம் கோயிலில் கொண்டாப்படும் முக்கிய திருவிழா கந்த சஷ்டி திருவிழா. இத்திருவிழாவானது ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் தீபாவளிக்கு அடுத்த நாள் தொடங்கி, 7 நாட்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

do-you-know-when-the-kandashashti-festival-begins-in-thiruparankundram

கந்தசஷ்டி திருவிழா கடந்த காலங்களில் பெரும்பாலும் தீபாவளிக்கு மறுநாள் தொடங்கியதால், தீபாவளி தினத்தன்று மதியம் முதலே பக்தர்கள் கோயிலுக்கு வந்து போட்டிபோட்டு இடம்பிடிப்பது வழக்கம். இதனால், திருப்பரங்குன்றம் கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். கடந்த ஆண்டு தீபாவளிக்கு மறுநாள் கந்தசஷ்டி தொடங்கவில்லை. அதற்கு அடுத்த நாளே தொடங்கப்பட்டது.

இந்நிலையில், வரும் அக்டோபர் 20 ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டு தீபாவளிக்கு மறுநாள் அல்லாமல், ஒருநாள் கழித்து அக்டோபர் 22 ஆம் தேதி (புதன்கிழமை) கந்த சஷ்டி திருவிழா தொடங்கவுள்ளது. காப்புக் கட்டுதலுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கவுள்ளது.

இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எப்போதும் தீபாவளியன்றே இடம் பிடிக்க வேண்டும் என்பதால் பண்டிகையைக் கொண்டாட இயலாத சூழல் ஏற்படும். ஆனால், இந்த ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி தொடங்குவதால் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிவிட்டு பக்தர்கள் வர ஏதுவாக இருக்கும்.

திருப்பரங்குன்றத்தில் அக்டோபர் 22 ஆம் தேதி தொடங்கும் கந்த சஷ்டி திருவிழாவானது 28 ஆம் தேதி வரை 7 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான வேல் வாங்குதல் நிகழ்ச்சி அக்டோபர் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார லீலை அக்டோபர் 27 ஆம் தேதி, திங்கள்கிழமையன்று கோலாகலமாக நடைபெறவுள்ளது.

அக்டோபர் 28 ஆம் தேதி காலை சட்டத் தேர் பவனி, மாலையில் பாவாடை தரிசனம், மூலவருக்கு தங்க கவசம் அணிவிப்பு நிகழ்ச்சிகள் ஆகியன நடைபெறவுள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+