நீங்க வாடகை வீட்டில் குடியிருக்கீங்களா? வீட்டின் உரிமையாளரா? ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவை பாருங்க
மதுரை: வாடகைதாரர் வீட்டு உரிமையாளர் இடையேயான உரிமையியல் பிரச்சனையில் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்த இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க மதுரை துணை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
வீட்டின் உரிமையாளருக்கும் வாடகைக்கு குடியிருப்போருக்கும் இடையே உரிமையியல் பிரச்சனை ஏற்படும் போது அதில் போலீசார் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக புகார்கள் ஆங்காங்கே உருவாகும். பொதுவாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை, மோசடி, மிரட்டல் போன்ற பிரச்சனைகளுக்கு காவல்துறையை அணுகி நிவாரணம் பெற முடியும். ஆனால் அதேநேரம் எந்த உரிமையியல் பிரச்சனையிலும் போலீசார் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது.

இந்நிலையில் வீட்டின் உரிமையாளருடன் வாடகை சம்பந்தமாக ஏற்பட்ட உரிமையில் பிரச்சினையில் நடவடிக்கை எடுக்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக மதுரையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் மீது மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த எஸ்.வெங்கட்ராமன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கு தொடர்ந்தார்.
எஸ்.வெங்கட்ராமன் தாக்கல் செய்திருந்த மனுவில், நான் மதுரை எஸ்.எஸ்.காலனி பாரதியார் 5வது தெருவில், சுப்பிரமணியன் தாயார் பிரேமாவதி என்பவர் வீட்டில் வாடகைக்குக்கு வசித்து வருகிறேன். வாடகை தொடர்பாக எனக்கும் பிரேமாவதிக்கும் இடையே 2018-ல் வாடகை ஒப்பந்தம் கையெழுத்தானது. நான் முறையாக வாடகை செலுத்தி வந்தேன். பிரேமாவதி 2020-ல் இறந்தார்.
அதன் பிறகு எனக்கும் சுப்பிரமணியனுக்கும் இடையே வாடகை உயர்வு தொடர்பாகப் பிரச்சினை ஏற்பட்டது.இந்நிலையில் சுப்பிரமணியன் கடந்த மாதம் அடி ஆட்களுடன் என் வீட்டிற்கு நுழைந்தார். நான் உடனடியாக அவசர போலீசாருக்கு தகவல் அளித்தேன். போலீசார் வந்ததால் அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறினர். இது குறித்து எஸ்.எஸ்.காலனி காவல் ஆய்வாளரிடம் புகார் கொடுத்தேன்.
காவல் ஆய்வாளர் என் புகாரின் பேரில் நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் கட்டப்பஞ்சாயத்து செய்தார். வாடகைப்பாக்கியை கொடுத்து விட்டு வீட்டை காலி செய்யுமாறு என்னை மிரட்டினார். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. சுப்பிரமணியன் புகாரின் பேரில் என்னைத் தொந்தரவு செய்யக்கூடாது என எஸ்.எஸ்.காலனி காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.இளங்கோவன், மனுதாரர் வாடகை பாக்கியைச் செலுத்திவிட்டு வீட்டை காலி செய்ய மனுதாரர் தயாராக இருக்கும் போது, மனுதாரருக்கும் வீட்டின் உரிமையாளருக்கும் இடையிலான பிரச்சினையில் காவல் ஆய்வாளர் தலையிட்டது துரதிர்ஷ்டவசமானது. உரிமையில் பிரச்சினையில் போலீசார் தலையிடக்கூடாது என நீதிமன்றம் மீண்டும் மீண்டும் உத்தரவிட்ட போதிலும், காவல் ஆய்வாளர் தலையிட்டுள்ளார். அவர் மீது மதுரை துணை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications