Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அங்கித் திவாரி கைது எதிரொலி.. வேறு சில ED அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப லஞ்ச ஒழிப்பு துறை திட்டம்?

Subscribe to Oneindia Tamil

மதுரை: லஞ்சம் வாங்கிய அமலாக்கத் துறை அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாகக் கூடுதல் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரியும் சுரேஷ் பாபு என்பவர் மீது ஏற்கனவே அமலாக்கத் துறை வழக்கு இருந்துள்ளது. இருப்பினும், அந்த வழக்கு முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

 DVAC has planned to send summon to few more ED officers in ED officers bribery issue

இருப்பினும், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் சுரேஷ் பாபு அந்த வழக்கைச் சொல்லி மிரட்டியுள்ளார், பிரதமர் அலுவலகத்தில் இருந்து அந்த வழக்கை விசாரிக்கச் சொல்லியுள்ளதாகவும் மிரட்டியுள்ளார்.

லஞ்சம்: இந்த வழக்கை முடிக்க 3 கோடி ரூபாய் லஞ்சம் வேண்டும் என அவர் கேட்டுள்ளார். இருப்பினும், அதற்கு டாக்டர் சுரேஷ் பாபு ஒத்துக்கொள்ளவில்லை. அதன் பிறகு சில காலம் கழித்து மீண்டும் அவரை தொடர்பு கொண்ட அங்கித் திவாரி, உயர் அதிகாரிகளிடம் பேசிவிட்டதாகவும் 51 லட்ச ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இதையடுத்து வேறுவழியின்றி டாக்டர் சுரேஷ் பாபு கடந்த மாதம் ரூ 20 லட்சம் லஞ்சம் அளித்துள்ளார்.

அமலாக்க துறை அதிகாரியை விஜிலென்ஸ் கைது செய்ய அதிகாரம் இருக்கா? மதுரை ED அதிகாரி கைதால் பரபரப்பு


இருப்பினும், மீதி 31 லட்சம் லஞ்சப் பணத்தை அளிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் அங்கித் திவாரி பல முறை டாக்டர் சரேஷ் பாவுவை மிரட்டியுள்ளார். இதனால் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசில் இது தொடர்பாகப் புகார் அளித்திருக்கிறார். லஞ்ச ஒழிப்புத் துறை அளித்த ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூ. 31 லட்சத்தை டாக்டர் சுரேஷ் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் அளித்துள்ளார்.

கைது: அதை வாங்கிக் கொண்டு அங்கித் திவாரி அங்கிருந்து தப்ப முயன்ற நிலையில், சுமார் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை விரட்டிச் சென்று பிடித்தனர். சுமார் 15 கிமீ மேல் விரட்டி சென்று அவரை பிடித்துள்ளனர். லஞ்ச ஒழிப்புத் துறையைப் பார்த்ததும் சாலையில் இருந்து காரை இறக்கித் தப்ப முயன்றதாகவும் இருப்பினும் லஞ்ச ஒழிப்புத் துறை பிடித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கைது செய்யப்பட்ட அங்கித் திவாரியிடம் பல மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

அவரிடம் சுமார் 15 மணி நேரம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தினர். மேலும், அவர் வேலை செய்து வந்த மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் சோதனையும் நடத்தினர். இதற்கு அங்கிருந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் முதலில் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பின்னர் அங்கித் திவாரி வேலை செய்த இடத்தில் மட்டும் சோதனை நடத்தப்பட்டது. விடிய விடிய நடந்த சோதனை காலை நிறைவடைந்தது.

சம்மன் அனுப்ப திட்டம்: இந்த சோதனையில் என்ன கைப்பற்றப்பட்டது என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது ஒரு பக்கம் இருக்கக் கைதான அங்கித் திவாரி திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்ட நிலையில், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதில் மற்ற அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த விவகாரத்தில் மற்ற லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்ப லஞ்ச ஒழிப்புத் துறை முடிவு செய்துள்ளதாகப் பரபர தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+