அங்கித் திவாரி கைது எதிரொலி.. வேறு சில ED அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப லஞ்ச ஒழிப்பு துறை திட்டம்?
மதுரை: லஞ்சம் வாங்கிய அமலாக்கத் துறை அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாகக் கூடுதல் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரியும் சுரேஷ் பாபு என்பவர் மீது ஏற்கனவே அமலாக்கத் துறை வழக்கு இருந்துள்ளது. இருப்பினும், அந்த வழக்கு முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் சுரேஷ் பாபு அந்த வழக்கைச் சொல்லி மிரட்டியுள்ளார், பிரதமர் அலுவலகத்தில் இருந்து அந்த வழக்கை விசாரிக்கச் சொல்லியுள்ளதாகவும் மிரட்டியுள்ளார்.
லஞ்சம்: இந்த வழக்கை முடிக்க 3 கோடி ரூபாய் லஞ்சம் வேண்டும் என அவர் கேட்டுள்ளார். இருப்பினும், அதற்கு டாக்டர் சுரேஷ் பாபு ஒத்துக்கொள்ளவில்லை. அதன் பிறகு சில காலம் கழித்து மீண்டும் அவரை தொடர்பு கொண்ட அங்கித் திவாரி, உயர் அதிகாரிகளிடம் பேசிவிட்டதாகவும் 51 லட்ச ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இதையடுத்து வேறுவழியின்றி டாக்டர் சுரேஷ் பாபு கடந்த மாதம் ரூ 20 லட்சம் லஞ்சம் அளித்துள்ளார்.
அமலாக்க துறை அதிகாரியை விஜிலென்ஸ் கைது செய்ய அதிகாரம் இருக்கா? மதுரை ED அதிகாரி கைதால் பரபரப்பு
இருப்பினும், மீதி 31 லட்சம் லஞ்சப் பணத்தை அளிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் அங்கித் திவாரி பல முறை டாக்டர் சரேஷ் பாவுவை மிரட்டியுள்ளார். இதனால் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசில் இது தொடர்பாகப் புகார் அளித்திருக்கிறார். லஞ்ச ஒழிப்புத் துறை அளித்த ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூ. 31 லட்சத்தை டாக்டர் சுரேஷ் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் அளித்துள்ளார்.
கைது: அதை வாங்கிக் கொண்டு அங்கித் திவாரி அங்கிருந்து தப்ப முயன்ற நிலையில், சுமார் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை விரட்டிச் சென்று பிடித்தனர். சுமார் 15 கிமீ மேல் விரட்டி சென்று அவரை பிடித்துள்ளனர். லஞ்ச ஒழிப்புத் துறையைப் பார்த்ததும் சாலையில் இருந்து காரை இறக்கித் தப்ப முயன்றதாகவும் இருப்பினும் லஞ்ச ஒழிப்புத் துறை பிடித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கைது செய்யப்பட்ட அங்கித் திவாரியிடம் பல மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
அவரிடம் சுமார் 15 மணி நேரம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தினர். மேலும், அவர் வேலை செய்து வந்த மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் சோதனையும் நடத்தினர். இதற்கு அங்கிருந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் முதலில் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பின்னர் அங்கித் திவாரி வேலை செய்த இடத்தில் மட்டும் சோதனை நடத்தப்பட்டது. விடிய விடிய நடந்த சோதனை காலை நிறைவடைந்தது.
சம்மன் அனுப்ப திட்டம்: இந்த சோதனையில் என்ன கைப்பற்றப்பட்டது என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது ஒரு பக்கம் இருக்கக் கைதான அங்கித் திவாரி திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்ட நிலையில், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதில் மற்ற அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த விவகாரத்தில் மற்ற லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்ப லஞ்ச ஒழிப்புத் துறை முடிவு செய்துள்ளதாகப் பரபர தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications