அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு! ஜனநாயக வாலிபர் சங்கம் நடைப்பயணம்
மதுரை: மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கான உரிமையை மத்திய அரசு வழங்கியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்களும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் (DYFI) நடைப்பயணம் மேற்கொள்கிறார்கள்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தமிழகத்தின் முதல் பாரம்பரிய பல்லுயிர் பெருக்க தளமான அரிட்டாபட்டி பகுதி உள்ளது. இங்கு கனிம சுரங்கம் அமைப்பதற்கான உரிமையை மத்திய அரசு, இந்துஸ்தான் ஜிங்க் என்ற நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

இதற்கு அந்த பகுதி மக்களும் தமிழக அரசும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அரிட்டாபட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சுரங்கம் அமைக்கக் கூடாது. மத்திய அரசு வழங்கிய அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அரிட்டாபட்டி மக்களும் இயற்கை ஆர்வலர்களும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைப்பதற்கான அனுமதியை எப்போதும் தமிழக அரசு தராது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நான் முதல்வராக இருக்கும் வரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி தரமாட்டேன் என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்திருந்தார். அப்படி ஒரு நிலை வந்தால் நான் என் பணியை ராஜினாமா செய்வேன் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானப்பட்டது. இதனிடையே அரிட்டாபட்டி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் அரிட்டாபட்டி கிராமத்தினரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் இணைந்து நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications