சிட்டிக்குள் வேண்டாம்! எடப்பாடி போட்ட கண்டிஷன்! அவுட்டரிலேயே ரூம் புக்கிங்! அதிமுக மாநாடு சுவாரஸ்யம்
மதுரை: அதிமுகவின் வீர எழுச்சி மாநாடு வரும் 20ஆம் தேதி மதுரையில் நடைபெறும் நிலையில் அதில் பங்கேற்க செல்லும் எடப்பாடி பழனிசாமி நகருக்குள் தங்குவதை தவிர்த்து புறநகரில் உள்ள 4 நட்சத்திர விடுதியில் தங்குகிறார்.
பசுமலை தாஜ், கோர்ட்யார்ட் மேரியட், போன்ற நட்சத்திர விடுதிகளில் எடப்பாடி பழனிசாமி தங்குவார் என எதிர்பார்த்த நிலையில் அவருக்கு அமிகா என்ற 4 நட்சத்திர விடுதியில் ரூம் புக் செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இந்த விடுதியானது மதுரை விமான நிலையத்திற்கு மிக அருகாமையில் இருப்பதும், மாநாடு திடலுக்கு பக்கத்தில் இருப்பதுமே ஆகும்.

இதனால் தான் சிட்டியை தவிர்த்து அவுட்டரில் உள்ள இந்த விடுதியை எடப்பாடி பழனிசாமிக்காக உள்ளூர் நிர்வாகிகள் தேர்வு செய்துள்ளனர். அதேபோல் அன்றைய தினம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்டோரும் அதே விடுதியில் தான் தங்குகின்றனர்.
முன்னதாக சனிக்கிழமை காலையே எடப்பாடி பழனிசாமி மதுரை வந்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தனக்கான உணவு மெனுவில் நான் வெஜ் உணவுகளையும் எடப்பாடி பழனிசாமி தவிர்க்கச் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாநாடு மிகப் பெரிய மாற்றத்தை நிகழ்த்திக் காட்டும் என நம்பும் அவர் மாநாடு பெரும் வெற்றி அடையும் என நம்பிக்கை கொண்டிருக்கிறார். அதிமுகவுக்கு தலைமை தாங்க தொடங்கிய பிறகு எடப்பாடி பழனிசாமி நடத்தும் முதல் மாநாடு மதுரை மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.
அதில் என்னென்ன பேச வேண்டும் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமிக்கு தனி டீமே உரை தயார் செய்துகொண்டிருக்கிறது. உள்ளூர் அரசியல் முதல் இந்தியா கூட்டணி உட்பட தேசிய அரசியல் வரை பேசும் வகையில் எடப்பாடியின் உரை அமையும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications