பதவி வாங்க யார் பின்னாலும் செல்வார் ஒபிஎஸ்... மீண்டும் வம்பிழுத்த தங்க தமிழ்ச்செல்வன்
மதுரை: பதவி வாங்க யார் பின்னாலும் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் செல்வார் என்றும் அவருக்கு கொள்கை கோட்பாடு என்று எதுவும் இல்லை என்றும் அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் குற்றம்சாட்டினார்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் அமமுக சார்பில் உசிலம்பட்டியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ மகேந்திரன் போட்டியிடுகிறார்.

இதற்காக திருப்பரங்குன்றத்தில் அமமுக சார்பில் தேர்தல் பிரச்சார அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் திறந்துவைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அமமுக தான் உண்மையான அதிமுக. ஓ.பி.எஸ், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தேர்தலில் வேலை பார்த்தவர். சந்தர்ப்பவாத அரசியல்வாதி. அவரை நம்பி வந்தவர்களுக்கு ஒன்றும் செய்ததில்லை. மகனுக்கும் மட்டும் தான் செய்தார்.
ஒபிஎஸ்க்கு கொள்கை கோட்பாடு என்று எதுவும் கிடையாது. பதவி வாங்க யார் பின்னாலும் அவர் செல்வார். ஓ.பி.எஸ், நிச்சயம் பி.ஜே.பி பக்கம் போய்விடுவார்" இவ்வாறு கூறினார்.
முன்னதாக ஒபிஎஸ் தங்க தமிழ்ச்செல்வனுக்கு பதில் அளிக்கும் வகையில், ஒரு நாளும் பாஜகவுக்கு செல்ல மாட்டேன். அவதூறான கருத்து என விளக்கம் அளித்தார். அதையும் கிண்டல் செய்த தங்கதமிழ்செல்வன், எனக்கு பதில் சொல்ல மாட்டேன், சொல்ல மாட்டேன் என்று சொல்லிவிட்டு, ஒருவாரமாக எனக்கு தான் அவர் பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறார் என்றார்.












Click it and Unblock the Notifications