ஒரே குறி இதுதான்.. மதுரைக்கு புதிய திட்டங்களா? இதுவரை திமுக என்ன செய்தது? கேட்கிறார் செல்லூர் ராஜூ
மதுரைக்கு திட்டங்களை முதல்வர் அறிவித்தது தேர்தலுக்காக என்று செல்லூர் ராஜு கூறியுள்ளார்
மதுரை: முதல்வர் ஸ்டாலின் மாநகராட்சி தேர்தலுக்காகவே மதுரைக்கு புதிய திட்டங்களை அறிவித்து உள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.. அத்துடன், மதுரைக்கு அறிவித்த திட்டங்களுக்கு எங்கிருந்து நிதி பெறப்பட உள்ளது என்பதையும் முதல்வர் விளக்க வேண்டும் என்றும் செல்லூர் ராஜு கேட்டுள்ளார்..!
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105 வது பிறந்த நாளையொட்டி மதுரை அருள்தாஸ்புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதிமுக கட்சி கொடியேற்றி வைத்தார்..
இனிப்பு மற்றும் உணவுகளையும் வழங்கினார்.. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு சொல்லும்போது:

முதல்வர்
"அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை முதல்வர் நேற்று திறந்து வைத்துள்ளார்... அதிமுக ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பாலங்களை முதல்வர் அறிவிப்பாகவும் வெளியிட்டு இருக்கிறார்.. முதல்வர் அறிவித்த மேலக்கால் சாலையை அகலப்படுத்துவற்கு பதில், வைகை ஆற்றின் கரையோரம் சாலை அமைக்கலாம். முதல்வர் ஸ்டாலின் மாநகராட்சி தேர்தலுக்காக மதுரைக்கு புதிய திட்டங்களை அறிவித்து உள்ளார்.

வளர்ச்சி திட்டங்கள்
மதுரைக்கான வளர்ச்சி திட்டங்களை தற்போதைய திமுக அமைச்சர்கள் அரசிடம் கேட்டு செயல்படுத்த வேண்டும், திமுக ஆட்சி காலத்தில் மதுரையில் முறையாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தவில்லை... மதுரைக்கு முதல்வர் அறிவித்த திட்டங்களுக்கு எங்கிருந்து நிதி பெறப்பட உள்ளது என்பதை விளக்க வேண்டும். எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது.. தேர்தலில் மக்கள் தான் எஜமானர்கள், மக்களை நம்பியே அதிமுக தேர்தலை எதிர் கொள்கிறது.

தொலைநோக்கு பார்வை
மதுரையின் வளர்ச்சிக்கு இந்த அரசு என்ன செய்ய போகிறது, என்னென்ன திட்டங்களை கொண்டு வர போகிறது என்பதை விரிவாக எடுத்து சொல்ல வேண்டும்.. மதுரையில் தொலைநோக்கு பார்வையுடன் செய்ய வேண்டும்.. முதல்வர் அறிவித்திருக்கிறார், ஆனால் இது அறிவிப்புடன் நின்றுவிடக்கூடாது.. எந்த நிதியில், எந்த திட்டங்கள் நிறைவேற போகிறது? மத்திய அரசு நிதியை பெற்று நிறைவேற்ற போகிதறா? அல்லது உலக வங்கியில் நிதியை வாங்க போகிறதா? என்பதை விளக்க வேண்டும்.

அம்மா ஆட்சி
மதுரை மாநகராட்சி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.. பெண்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் தருவதே அதிமுகதான் நான் மாவட்ட செயலாளர் என்றால், இணை செயலாளர் ஒரு பெண்தான்.. இப்போ எங்கள் கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி, பெண்களுக்கென தனி இடத்தை தந்து வருகிறோம். அம்மா ஆட்சியில் 50 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.. தாலிக்கு தங்கம், தொட்டில் குழந்தை, பாலுட்டும் பெண்களுக்கு தனி அறை., இப்படி எத்தனையோ திட்டங்களை பெண்களை முன்னிலைப்படுத்திதான் அம்மா கொண்டுவந்தாங்க.. அந்த வகையில், எப்போதுமே பெண்களுக்கு அதிமுக முக்கியத்துவம் தரும்" என்றார்.
-
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ!












Click it and Unblock the Notifications