Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு! நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் ஆகியோர் 5.30 மணிக்குள் ஆஜராகாவிட்டால் கடும் உத்தரவு பிறப்பிக்க தயங்கமாட்டேன் என நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தெரிவித்தார். அதையேற்று, மதுரை மாநகர காவல் ஆணையர் காணொளிக் காட்சி வாயிலாக ஆஜரானார். இதையடுத்து அவரிடம் விசாரித்த நீதிபதி, மலை உச்சியில் தீபத் தூணில் இன்று மாலை 7 மணிக்குள் தீபம் ஏற்றி இரவு 10.30க்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தார். ஆனால் தீபம் ஏற்றப்படாத நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இரவு நடக்கும் என்று சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணை காலை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றக் கூடாது என எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் மதுரை மாநகர காவல் ஆணையர், நீதிபதியின் கேள்விக்கு பதில் அளித்தார்.

Failing to Appear by 5 30 PM Will Invite Strict Orders Warns Judge Swaminathan

மதுரை திருப்பரங்குன்றத்தில் வழக்​க​மாக உச்​சிப் பிள்​ளை​யார் கோயில் முன் தீபம் ஏற்​றப்​படும். இந்​நிலை​யில், இந்த ஆண்டு மலை உச்​சி​யில் உள்ள தீபத் தூணிலும் கார்த்​திகை தீபம் ஏற்ற வேண்​டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி உத்​தர​விட்​டார்.

இதையடுத்​து, திருப்பரங்குன்றம் முழு​வதும் காவல் ஆணை​யர் லோகநாதன் தலை​மை​யில் நேற்று போலீசார் குவிக்​கப்பட்​டனர். பின்​னர் உச்சிப் பிள்​ளை​யார் கோயில் முன்​புள்ள தீபத்​தூணில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்​றப்​பட்​டது. ஆனால், மலை உச்சி தீபத்​தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இதற்கிடையே இந்து முன்​னணி, பாஜக​வினர் மற்றும் பக்​தர்​கள் திரண்டு தீபத்​தூணில் தீபம் ஏற்​றக்​கோரி கோஷமிட்​டபடி, போலீ​ஸாரின் தடைகளை அப்புறப்படுத்தி 16 கால் மண்​டபம் வரை முன்னேறினர். அவர்​களைத் தடுக்க முயன்ற போலீ​சாருக்​கும், இந்து அமைப்​பினருக்​கும் இடையே தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தாவிடம் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரித்தது.

நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர். மனுதாரர் ராம ரவிக்குமார் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தனி வழக்காக விசாரிப்பார் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.

இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இன்று மீண்டும் விசாரித்தார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். இந்த வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் காணொளிக்காட்சி வாயிலாக ஆஜராக தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். 5.30 மணிக்குள் சம்பந்தப்பட்டவர்கள் ஆஜராகாவிட்டால் கடும் உத்தரவு பிறப்பிக்க தயங்கமாட்டேன் என நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் கோயிலின் செயல் அலுவலர் உடனடியாக காணொலி வாயிலாக ஆஜராக வேண்டும், நீதிமன்றத்தின் மதிப்பு புரிய வேண்டும் என்பதற்காகவே இதனைச் செய்கிறேன் என்றும் தனி நீதிபதி தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாநகர காவல் ஆணையர் காணொளிக் காட்சி வாயிலாக ஆஜராகினார். அவரிடம் தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் கேள்விகளை எழுப்பினார்.

144 தடை உத்தரவு எந்த நேரத்தில் பிறப்பிக்கப்பட்டது, எந்த நேரத்தில் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தீர்கள் என நீதிபதி கேள்வி எழுப்பினார். பதற்றமான சூழலை கருத்தில் கொண்டு, மாலை 5.45 மணியளவில் 144 தடை உத்தரவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 6.10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் 144 தடை ய்த்தரவு பிறப்பித்தார் என காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு காவல் ஆணையர், 3.30 மணி முதல் பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு அளித்தோம், கூட்டம் அதிகமானதும் பதற்ற சூழலை கருத்தில் கொண்டே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும், எங்களது நோக்கம் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கூடாது, மதிக்கக்கூடாது என்பது அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, திருப்பரங்குன்றத்தில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவை ரத்து செய்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். மேலும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் இன்று மாலை 7 மணிக்குள் தீபம் ஏற்ற நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். மேலும், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தியது தொடர்பான அறிக்கையை நாளை காலை 10.30 மணிக்குள் சமர்ப்பிக்கவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், தீபம் ஏற்ற காவல்துறை அனுமதிக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு செல்ல இருப்பதால் அனுமதி மறுப்பதாக காவல்துறை தெரிவித்தது. இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இரவு நடக்கும் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இரவு விசாரணை நடக்காது என்றும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்றைய உத்தரவு தொடர்பாக நாளை காலை 10.30 மணிக்கு தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+