"மதுரையில் வெங்கடேசன்னு ஒரு ஆள் இருக்கான்.." அமைச்சர் நேரு பேச்சால் அதிர்ந்து போன மா.கம்யூனிஸ்ட்
மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.வெங்கடேசனை, "அவன்.. இவன்" என்று ஒருமையில் பேசி இருக்கிறார் தமிழக நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் கே.என். நேரு. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
Recommended Video
மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பியான, வெங்கடேசன், தமிழர் மற்றும் தமிழ் நலம் சார்ந்த பல்வேறு விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்பி வருபவர்.
சமூக வலைத்தளங்களிலும் மிகவும் துரிதமாக செயல்பட கூடியவர். மத்திய அரசுக்கு தமிழ் சார்ந்த பல்வேறு விஷயங்களுக்காக அழுத்தமாக கேள்விகளை முன்வைத்து வருபவர்.
திமுகவிடம் 4 மேயர் சீட் கேட்கும் காங்... எப்போது பேச்சுவார்த்தை? காத்திருக்கும் கூட்டணி கட்சிகள்
மதுரை விமான நிலையம்
இன்னொரு பக்கம் கே.என்.நேரு திமுகவின் சீனியர் அமைச்சர். முதல்வர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர்களில், இவரும், ஒருவர். ஆனால் இவர்களுக்குள் இப்படி ஒரு கசப்பு ஏற்படுவதற்கு கே.என்.நேரு மதுரை விமான நிலையத்தில் அளித்த ஒரு பேட்டி காரணமாக மாறிவிட்டது.
அந்த ஆள்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக ஒரு கேள்வியை அமைச்சர் நேருவிடம் நிருபர்கள் முன்வைத்தபோது, "இந்த கேள்வியை சம்பந்தப்பட்டவர்களிடம் கேளுங்கள்.. மதுரையில் வெங்கடேசன்னு ஒரு ஆள் இருக்கான்.. அந்த ஆள் கிட்ட கேளு.." என்று நேரு தடாலடியாக பேசியிருக்கிறார். இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்
இது தொடர்பாக, மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர செயலர் கணேசன், மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக, மதுரை விமான நிலையத்தில், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேருவிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. மாறாக, 'சம்பந்தப்பட்டவர்களை விட்டு என்னிடம் வந்து கேட்கிறீர்கள். மதுரையில் வெங்கடேசன் என்ற எம்.பி. ஒருவன் இருக்கிறான், அவனிடம் கேளுங்கள்' என, நேரு பதில் அளித்துள்ளார்.
கூட்டணி கட்சி
மக்களால் தேர்வு செய்யப்பட்ட, கூட்டணி கட்சியின் எம்பியை, ஆளுங்கட்சி அமைச்சர் பொது வெளியில் இவ்வாறு பேசியுள்ளது கண்டனத்திற்கு உரியது. முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.